ETV Bharat / state

கணவரின் மரணத்தில் சந்தேகம் எழுப்பும் மனைவி

தருமபுரி: கணவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் ஒருவர் மனு அளித்துள்ளார்.

கணவரின் மரணத்தில் சந்தேகம் எழுப்பும் மனைவி
author img

By

Published : Mar 26, 2019, 11:08 PM IST

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன். இவரது மகன் பாலமுருகன். இவருக்கு வயது 40. இவர் அதே பகுதியைச் சேர்ந்த லாரி முதலாளி கடவுள் என்பவரிடம் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி கோலார் பகுதியில் இருந்து பால் பவுடர் ஏற்றிக்கொண்டு அசாம் மாநிலம் நவகான் மிலிட்டரி கேன்டீனுக்கு சென்றுள்ளார்.

லாரியில் கன்னியாகுமரி மாவட்டம் பொய்கை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் கூடுதல் ஓட்டுனராக சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற பாலமுருகன் திடீரென காணாமல் போய்விட்டதாகவும், திரும்ப தமிழகத்திற்கு லாரி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் வெங்கடேசனும், லாரி உரிமையாளர் கடவுளும் பாலமுருகன் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அசாம் மாநிலம் கோல்காட் பகுதியில் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு மர்மமான முறையில் பாலமுருகன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை கோல்காட் பகுதி டிஎஸ்பி அங்கிருந்து தமிழக காவல்துறைக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த பாலமுருகனின் மனைவி தன் கணவனின் உடலை அரசு சார்பில் அங்கிருந்து கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகவும் முறையான விசாரணையை மேற்கொண்டு கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ரஹ்மத்துல்லா கானிடம் மனு அளித்துள்ளார்.


தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன். இவரது மகன் பாலமுருகன். இவருக்கு வயது 40. இவர் அதே பகுதியைச் சேர்ந்த லாரி முதலாளி கடவுள் என்பவரிடம் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி கோலார் பகுதியில் இருந்து பால் பவுடர் ஏற்றிக்கொண்டு அசாம் மாநிலம் நவகான் மிலிட்டரி கேன்டீனுக்கு சென்றுள்ளார்.

லாரியில் கன்னியாகுமரி மாவட்டம் பொய்கை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் கூடுதல் ஓட்டுனராக சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற பாலமுருகன் திடீரென காணாமல் போய்விட்டதாகவும், திரும்ப தமிழகத்திற்கு லாரி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் வெங்கடேசனும், லாரி உரிமையாளர் கடவுளும் பாலமுருகன் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அசாம் மாநிலம் கோல்காட் பகுதியில் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு மர்மமான முறையில் பாலமுருகன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை கோல்காட் பகுதி டிஎஸ்பி அங்கிருந்து தமிழக காவல்துறைக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த பாலமுருகனின் மனைவி தன் கணவனின் உடலை அரசு சார்பில் அங்கிருந்து கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகவும் முறையான விசாரணையை மேற்கொண்டு கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ரஹ்மத்துல்லா கானிடம் மனு அளித்துள்ளார்.


Intro:கணவர் மர்ம மரணம் விசாரணை நடத்தி சடலத்தை மீட்டு தரக்கோரி மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.


Body:கணவர் மர்ம மரணம் விசாரணை நடத்தி சடலத்தை மீட்டு தரக்கோரி மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.


Conclusion:அசாமிர்க்கு மிலிட்டரி கேன்டீனுக்கு பால் பவுடர் ஏற்றி சென்ற லாரி டிரைவர் ஆணுறுப்பு அறுத்து கொலை: விசாரணை நடத்த மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு மனு ......     தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன் இவரது மகன் பாலமுருகன் வயது 40 லாரி டிரைவர் இவர் அதே பகுதியைச் சேர்ந்த லாரி முதலாளி கடவுள் என்பவரிடம் வேலை செய்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி கோலார் பகுதியில் இருந்து பால் பவுடர் ஏற்றிக்கொண்டு அசாம் மாநிலம் நவகான் மிலிட்டரி கேன்டீனுக்கு சென்றுள்ளார்.லாரியில் கன்னியாகுமரி மாவட்டம் பொய்கை பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் வெங்கடேசன் கூடுதல் டிரைவராக சென்றுள்ளார்.ஆனால் அங்கு சென்ற பாலமுருகன் திடீரென காணாமல் போய்விட்டதாகவும் திரும்ப தமிழகத்திற்கு தான் லாரி எடுத்து வந்து விட்டதாகவும் வெங்கடேசனும் லாரி உரிமையாளரும் பாலமுருகன் உறவினர்களுக்குதகவல் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் அசாம் மாநிலம் கோல்காட் பகுதியில் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு மர்மமான முறையில் பாலமுருகன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை கோல்காட் பகுதி டிஎஸ்பி அங்கிருந்து தமிழக காவல்துறைக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தகவல் சொல்லியுள்ளார்.இதனை அறிந்த பாலமுருகனின் மனைவி தன் கணவன் பாலமுருகன் உடலை அரசு சார்பில் அங்கிருந்து கொண்டு வரவேண்டும் என்றும் அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகவும் விதமான விசாரணை மேற்கொண்டு கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை இன்று மதியம் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ரஹ்மத்துல்லா கானிடம் மனு அளித்தார். பாலமுருகனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.