ETV Bharat / state

சாலை பணிகளை தொடங்காத அலுவலர்களுடன் எம்.பி. காரசார வாக்குவாதம் - சாலை பணிகள் தாமதம்

தருமபுரி: அரூர் பிரதான சாலையில் விபத்து ஏற்படும் இடங்களை மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த அரசு அலுவலர்கள் முறையாக பதிலளிக்காததால் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

எம்.பி செந்தில்குமார்
author img

By

Published : Sep 27, 2019, 9:58 PM IST

தருமபுரியில் இருந்து சேலம், வேலூர் செல்லும் வாகனங்கள் அரூர் வழியாக செல்லும் பிரதான சாலையில்தான் செல்லவேண்டும். இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

இதனை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாத காரணத்தால், பொதுமக்கள் தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமாரிடம் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து செந்தில்குமார் இன்று அரூர் பகுதிக்கு வந்து சேதமடைந்த சாலைகளை பார்வையிட்டார். பின்பு நெடுஞ்சாலை துறை அலுவலர்களை நேரில் வரவழைத்து சாலைகள் பணி எப்போது தொடங்கப்படும் என கேட்டறிந்தார். நிதி ஒதுக்கியும், ஒப்பந்தம் விடப்பட்டும் ஏழு மாதங்கள் ஆகியும் இன்றுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

வாக்குவாதம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்
வாக்குவாதம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்

மேலும் இந்த சாலையில் இதுவரையில் எத்தனை விபத்துகள் நிகழ்ந்து இருக்கின்றன என அதிகாரிகளிடம் விவரம் கேட்டதற்கு, இதுகுறித்த விவரங்கள் தற்போது கையில் இல்லை, போதிய விவரங்களை இரண்டு நாட்கள் கழித்து தருவதாக தெரிவித்தனர். இதற்கு துறை சார்ந்த விவரங்களைக்கூட கையில் வைத்துக் கொள்ளாமல் வெறுமனே வேடிக்கை பார்ப்பதற்காகவா இங்கு வந்தீர்கள் என அலுவலர்களை எம்.பி. செந்தில்குமார் கடுமையாக சாடினார்.

பின்பு சாலைப் பணி ஒப்பந்தம் செய்துள்ள ஒப்பந்ததாரரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர் சாலைப் பணிகள் எப்போது தொடங்கப்படும், எப்பொழுது முடிக்கப்படும் என கேட்டறிந்தார். அதற்கு இந்த சாலைப்பணிகள் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி, 2021 ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் என உறுதியளித்தார்.

தருமபுரியில் இருந்து சேலம், வேலூர் செல்லும் வாகனங்கள் அரூர் வழியாக செல்லும் பிரதான சாலையில்தான் செல்லவேண்டும். இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

இதனை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாத காரணத்தால், பொதுமக்கள் தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமாரிடம் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து செந்தில்குமார் இன்று அரூர் பகுதிக்கு வந்து சேதமடைந்த சாலைகளை பார்வையிட்டார். பின்பு நெடுஞ்சாலை துறை அலுவலர்களை நேரில் வரவழைத்து சாலைகள் பணி எப்போது தொடங்கப்படும் என கேட்டறிந்தார். நிதி ஒதுக்கியும், ஒப்பந்தம் விடப்பட்டும் ஏழு மாதங்கள் ஆகியும் இன்றுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

வாக்குவாதம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்
வாக்குவாதம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்

மேலும் இந்த சாலையில் இதுவரையில் எத்தனை விபத்துகள் நிகழ்ந்து இருக்கின்றன என அதிகாரிகளிடம் விவரம் கேட்டதற்கு, இதுகுறித்த விவரங்கள் தற்போது கையில் இல்லை, போதிய விவரங்களை இரண்டு நாட்கள் கழித்து தருவதாக தெரிவித்தனர். இதற்கு துறை சார்ந்த விவரங்களைக்கூட கையில் வைத்துக் கொள்ளாமல் வெறுமனே வேடிக்கை பார்ப்பதற்காகவா இங்கு வந்தீர்கள் என அலுவலர்களை எம்.பி. செந்தில்குமார் கடுமையாக சாடினார்.

பின்பு சாலைப் பணி ஒப்பந்தம் செய்துள்ள ஒப்பந்ததாரரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர் சாலைப் பணிகள் எப்போது தொடங்கப்படும், எப்பொழுது முடிக்கப்படும் என கேட்டறிந்தார். அதற்கு இந்த சாலைப்பணிகள் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி, 2021 ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் என உறுதியளித்தார்.

Intro:tn_dpi_01_dmk_mp_senthilkumar_ angery_vis_7204444


Body:tn_dpi_01_dmk_mp_senthilkumar_ angery_vis_7204444


Conclusion: பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரூர் சேலம் பிரதான சாலையில் விபத்து ஏற்படும் இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்  ஆய்வு- முறையாக பதிலளிக்காத அதிகாரியிடம் காரசார வாக்குவாதம். தர்மபுரி மாவட்டம் வழியாக  சேலம் வேலூர் செல்லும் பிரதான சாலை அரூர் பாப்பிரெட்டிப்பட்டி வழியாக செல்கிறது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாகவே  குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இதனால் இந்த சாலைகளில் போக்கு வரத்து அதிகமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாத காரணத்தால் பொதுமக்கள் தர்மபுரி திமுக  நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு புகார் அளித்தனர்.இன்று தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சேதமடைந்த சாலைகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  சாலையை புதுப்பிக்க தேசியநெடுஞ்சாலைத்துறை சார்பில், அயோத்தியபட்டினம் முதல் பள்ளிப்பட்டி வரை 35 கிலோமீட்டர் சாலை புதுப்பிக்க ரூ 9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. . நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்  ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆய்வுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அதிகாரிகள் முன்னிலையில் பள்ளமான சாலை பகுதிகளில் நீளம் அகலம் உயரம் போன்றவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் டேப் மூலம் அளவு செய்தார். இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரியை அழைத்து சாலைகள் பணி எப்போது தொடங்கப்படும் எப்பொழுது முடிக்கப்படும் என கேட்டறிந்தார். தொடர்ந்து ஆய்வுக்கு ஒப்பந்ததாரர் வராதது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் நிதி ஒதுக்கி ஒப்பந்தம் விடப்பட்டு 7 மாதங்கள் ஆகியும் இன்றுவரை பணிகள் தொடங்கப்படவில்லை இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கிறது சாலைப்பணி தொடங்குவதற்கு கால தாமதம் என அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து இந்த சாலையில் இதுவரையில் எத்தனை விபத்துகள் நடந்து இருக்கின்றன எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்த பல்வேறு விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டார். ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்த விவரங்கள் தற்போது கையில் இல்லை, போதிய விவரங்களை இரண்டு நாட்கள் கழித்து தருவதாக தெரிவித்தார். துறை சார்ந்த விவரங்களை கூட கையில் வைத்துக் கொள்ளாமல் வெறுமனே வேடிக்கை பார்ப்பதற்காக இங்கு வந்தீர்கள் என அதிகாரிகளை கடுமையாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரித்தார்.  இதனால் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனைத்தொடர்ந்து நீண்ட நேர வாக்கு வாதத்திற்கு பிறகு, விபத்து குறித்த விவரங்களை மட்டும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் வழங்கினர்.  தொடர்ந்து சாலைப் பணி ஒப்பந்தம் செய்துள்ள ஒப்பந்ததாரரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு சாலைப் பணிகள் எப்போது தொடங்கப்படும் எப்பொழுது முடிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார். இந்த சாலைப்பணி வருகிற அக்டோபர் 2 தேதி தொடங்கி, 15 மாதம் கழித்து 2021 ஜனவரி மாதம் முடித்து தருவதாக ஒப்பந்ததாரர் உறுதியளித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.