ETV Bharat / state

தருமபுரியில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - More than 100 Motorcycles seized

தருமபுரி: ஊரடங்கின்போது சுற்றித்திரிந்த 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை மாவட்ட காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

இருசக்கர வாகனம் பறிமுதல்
இருசக்கர வாகனம் பறிமுதல்
author img

By

Published : Apr 22, 2020, 1:17 PM IST

தருமபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதால் கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக உள்ளது. தொடர்ந்து மாவட்ட காவல்துறையினர் 10 சோதனைச் சாவடிகள் அமைத்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களைக் கண்காணித்துவருகின்றனர்.

பழைய தருமபுரி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் சுற்றித் திரிவது அதிகரித்துள்ளது. ஆகவே காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு தேவையின்றி சுற்றித்திரிந்த 100 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்தனர். காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு முகக்கவசம் அணிந்துசெல்ல வேண்டும் என அறிவுறுத்தித்தினர்.

இருசக்கர வாகனம் பறிமுதல்

தருமபுரிக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 400 பேர் வெளி மாவட்டங்களிலிருந்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மூலம் வைரஸ் தொற்று மாவட்டத்தில் பரவாமல் தடுக்க தொடர்ந்து காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கேரளா வழியா வராதீங்க... தமிழ்நாடு வருவாய் துறையினரை தடுத்த கேரள காவல் துறை!

தருமபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதால் கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக உள்ளது. தொடர்ந்து மாவட்ட காவல்துறையினர் 10 சோதனைச் சாவடிகள் அமைத்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களைக் கண்காணித்துவருகின்றனர்.

பழைய தருமபுரி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் சுற்றித் திரிவது அதிகரித்துள்ளது. ஆகவே காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு தேவையின்றி சுற்றித்திரிந்த 100 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்தனர். காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு முகக்கவசம் அணிந்துசெல்ல வேண்டும் என அறிவுறுத்தித்தினர்.

இருசக்கர வாகனம் பறிமுதல்

தருமபுரிக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 400 பேர் வெளி மாவட்டங்களிலிருந்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மூலம் வைரஸ் தொற்று மாவட்டத்தில் பரவாமல் தடுக்க தொடர்ந்து காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கேரளா வழியா வராதீங்க... தமிழ்நாடு வருவாய் துறையினரை தடுத்த கேரள காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.