ETV Bharat / state

பைக் மீது லாரி மோதி விபத்து: தம்பதி உயிரிழப்பு!

author img

By

Published : Feb 12, 2022, 3:09 PM IST

தருமபுரி அருகே லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி பரிதாபமாக உயிரிழப்பு
மனைவி பரிதாபமாக உயிரிழப்பு

தருமபுரி: நகரப்பகுதி ராமக்கா ஏரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாலஜங்கமனஹள்ளி பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்றும், அவர் செங்கல் வியாபாரி என்றும் தெரியவந்துள்ளது.

அவரது மனைவி வள்ளியம்மாள் இருவரும் திருமண நிகழ்வுக்குச் சென்று திரும்பும்போது, ராமகால்ஏரி மதிகோண்பளையம் பிரிவு சாலையில் லாரி மோதி தூக்கி வீசப்பட்டதில் லாரியின் சக்கரம் தலையின் மீது ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

அதன்பின் விபத்து ஏற்பட காரணமாக இருந்த லாரியின் ஓட்டுநர் அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டார். லாரி ஓட்டுநரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்த இருவரது உடல்களை காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து, விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: மூதாட்டிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது

தருமபுரி: நகரப்பகுதி ராமக்கா ஏரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாலஜங்கமனஹள்ளி பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்றும், அவர் செங்கல் வியாபாரி என்றும் தெரியவந்துள்ளது.

அவரது மனைவி வள்ளியம்மாள் இருவரும் திருமண நிகழ்வுக்குச் சென்று திரும்பும்போது, ராமகால்ஏரி மதிகோண்பளையம் பிரிவு சாலையில் லாரி மோதி தூக்கி வீசப்பட்டதில் லாரியின் சக்கரம் தலையின் மீது ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

அதன்பின் விபத்து ஏற்பட காரணமாக இருந்த லாரியின் ஓட்டுநர் அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டார். லாரி ஓட்டுநரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்த இருவரது உடல்களை காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து, விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: மூதாட்டிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.