கரோனா ஊரடங்கால் கடந்த எட்டு மாதங்களாக தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (நவ.27) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
காரிமங்கலம், நல்லம்பள்ளி உள்ளிட்ட தாலுக்காவில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில் இருந்து விவசாயிகள் காணொலி காட்சி மூலம் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குறைதீர் கூட்டம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!