நாடு முழுவதும் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக இருப்பதால், 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
காய்கறி மளிகை கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், சமையல் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்த அவர், பேருந்து நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்களிடம் போதுமான இடைவெளி விட்டு பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகளை விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க: கரோனா நடவடிக்கை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் எம்எல்ஏ ஆய்வு!