ETV Bharat / state

ஊர்ப்பொது காளையின் இறுதிச்சடங்கு - இணைந்து செய்த 7 கிராம மக்கள்

author img

By

Published : Jan 30, 2022, 8:23 PM IST

தருமபுரி பென்னாகரம் அருகே ஊர்ப் பொது காளை உயிரிழந்ததை அடுத்து காளையை 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சடங்குகளுடன் நல்லடக்கம் செய்தனர்.

ஊர் பொது காளையின் இறுதிசடங்கு - இணைந்து செய்த 7 கிராம மக்கள்
ஊர் பொது காளையின் இறுதிசடங்கு - இணைந்து செய்த 7 கிராம மக்கள்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்திற்கு உட்பட்ட கரியம்பட்டி, செங்கனூர் உள்ளிட்ட 7 கிராமத்துக்குத் தாய் கிராமமாக நாயக்கனூர் என்ற கிராமம் உள்ளது.

இக்கிராமத்தில் ஊர் பொதுவாக 'சாமி கூலி காளை' ஒன்றைக் கடந்த 20 ஆண்டுகளாக வளர்த்து வந்தனர். இந்த காளை ஆண்டுதோறும் 7 ஊர் சார்பாக நடைபெறும் எருது விடும் போட்டியில் முதன்மையாகவும் சிறப்பாகவும் பங்கேற்று வந்தது.

பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் அன்பு காட்டும் இந்தக் காளை, எருது விடும் விழாவில் தனது வீரத்தைக் காட்டி வந்துள்ளது. இதற்குப் பொதுமக்கள் சார்பாகப் புல், தவிடு போன்ற உணவுகள் தினந்தோறும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி

ஊர்ப் பொது காளையின் இறுதிச்சடங்கு - இணைந்து செய்த 7 கிராம மக்கள்

இந்த நிலையில் இந்தக் காளை திடீரென உயிரிழந்துள்ளது. இதனையடுத்து ஊா்ப்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

காளை மாட்டுக்கு சடங்குகள் மற்றும் மேள தாளத்துடன் சிறப்புப் பூஜைகள் செய்து நல்லடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க:நீட் தேர்வுக்கு எதிரான குரல் இந்தியா முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது - பிரின்ஸ் கஜேந்திரபாபு

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்திற்கு உட்பட்ட கரியம்பட்டி, செங்கனூர் உள்ளிட்ட 7 கிராமத்துக்குத் தாய் கிராமமாக நாயக்கனூர் என்ற கிராமம் உள்ளது.

இக்கிராமத்தில் ஊர் பொதுவாக 'சாமி கூலி காளை' ஒன்றைக் கடந்த 20 ஆண்டுகளாக வளர்த்து வந்தனர். இந்த காளை ஆண்டுதோறும் 7 ஊர் சார்பாக நடைபெறும் எருது விடும் போட்டியில் முதன்மையாகவும் சிறப்பாகவும் பங்கேற்று வந்தது.

பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் அன்பு காட்டும் இந்தக் காளை, எருது விடும் விழாவில் தனது வீரத்தைக் காட்டி வந்துள்ளது. இதற்குப் பொதுமக்கள் சார்பாகப் புல், தவிடு போன்ற உணவுகள் தினந்தோறும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி

ஊர்ப் பொது காளையின் இறுதிச்சடங்கு - இணைந்து செய்த 7 கிராம மக்கள்

இந்த நிலையில் இந்தக் காளை திடீரென உயிரிழந்துள்ளது. இதனையடுத்து ஊா்ப்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

காளை மாட்டுக்கு சடங்குகள் மற்றும் மேள தாளத்துடன் சிறப்புப் பூஜைகள் செய்து நல்லடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க:நீட் தேர்வுக்கு எதிரான குரல் இந்தியா முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது - பிரின்ஸ் கஜேந்திரபாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.