ETV Bharat / state

கொரோனா பீதி: நோயாளிகள், பார்வையாளர்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு!

author img

By

Published : Mar 12, 2020, 4:24 PM IST

தருமபுரி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நோயாளிகள், நோயாளிகளை பார்க்க வருபவர்கள் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

coronavirus-antibiotic-spray-for-patients-viewers
coronavirus-antibiotic-spray-for-patients-viewers

கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு இடங்களிலும் கருத்தரங்கம், விழிப்புணர்வு பேரணி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், நோயாளிகளின் உறவினா்களுக்கு கை கழுவுதல் குறித்து எடுத்து கூறி, கிருமி நாசினியை கைகளில் தெளித்து கை கழுவிய பின்பு மருத்துவமனை வளாகத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

நேயாளிகள், பார்வையாளர்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு

மேலும், தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் யாராவது பாதிக்கப்பட்டால், அவா்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் தனியாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:’கொரோனாவை தடுப்பது குறித்து விஜயபாஸ்கர் சீனாவிற்கே அறிவுரை வழங்கலாம்’ - காங்கிரஸ்

கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு இடங்களிலும் கருத்தரங்கம், விழிப்புணர்வு பேரணி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், நோயாளிகளின் உறவினா்களுக்கு கை கழுவுதல் குறித்து எடுத்து கூறி, கிருமி நாசினியை கைகளில் தெளித்து கை கழுவிய பின்பு மருத்துவமனை வளாகத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

நேயாளிகள், பார்வையாளர்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு

மேலும், தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் யாராவது பாதிக்கப்பட்டால், அவா்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் தனியாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:’கொரோனாவை தடுப்பது குறித்து விஜயபாஸ்கர் சீனாவிற்கே அறிவுரை வழங்கலாம்’ - காங்கிரஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.