ETV Bharat / state

‘8 வழிச்சாலை வழக்கை வென்றதற்கு நாங்கள் தான் காரணம்’ - கிருஷ்ணமூர்த்தி

author img

By

Published : Apr 13, 2019, 8:41 PM IST

தருமபுரி: 8 வழிச்சாலைக்காக போராடியது நாங்கள்தான், வழக்கு தொடுத்ததும் நாங்கள்தான், ஆனால் அன்புமணி உரிமை கொண்டாடுகிறார் என்று வழக்கு தொடுத்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி சாடியுள்ளார்.

கிருஷ்ணமூர்த்தி

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயி தான் முதன்முதலாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இவருக்குப் பின்பாக பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வழிச்சாலை குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டது தவறு என்றும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடமே திருப்பி அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருந்தது.

இத்தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘எட்டு வழிச்சாலை விவகாரத்தில் முதல் முதலாக வழக்கு தொடர்ந்தது நான் தான். ஆனால், பாமகவினர் தொடர்ந்து அவர்கள் வழக்கிட்டுத் தீர்ப்பு பெற்றதைப் போல ஆங்காங்கு தேர்தல் பரப்புரையில் கூறி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் பொய்யான பரப்புரையில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. எட்டு வழிச்சாலை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அன்புமணி பெயரோ, அவரது வழக்கறிஞர் பெயரோ இடம்பெறவில்லை. இந்த வழக்கில் நான் தொடர்ந்த வழக்குக்காகத் தான் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது’ என்று தெரிவித்தார்.

வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் இதனால் பாதிக்கப்படும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களைத் தோற்கடிப்போம் என்ற வாசகம் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை இவர்கள் பொது மக்களிடம் தற்போது வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயி தான் முதன்முதலாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இவருக்குப் பின்பாக பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வழிச்சாலை குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டது தவறு என்றும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடமே திருப்பி அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருந்தது.

இத்தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘எட்டு வழிச்சாலை விவகாரத்தில் முதல் முதலாக வழக்கு தொடர்ந்தது நான் தான். ஆனால், பாமகவினர் தொடர்ந்து அவர்கள் வழக்கிட்டுத் தீர்ப்பு பெற்றதைப் போல ஆங்காங்கு தேர்தல் பரப்புரையில் கூறி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் பொய்யான பரப்புரையில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. எட்டு வழிச்சாலை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அன்புமணி பெயரோ, அவரது வழக்கறிஞர் பெயரோ இடம்பெறவில்லை. இந்த வழக்கில் நான் தொடர்ந்த வழக்குக்காகத் தான் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது’ என்று தெரிவித்தார்.

வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் இதனால் பாதிக்கப்படும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களைத் தோற்கடிப்போம் என்ற வாசகம் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை இவர்கள் பொது மக்களிடம் தற்போது வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

8 வழி சாலைகாக போராடியது நாங்கள்தான் வழக்கு தொடுத்தது நாங்கள்தான் அன்புமணி உரிமை கொண்டாடுகிறார் வழக்கு தொடுத்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி.  8 வழிசாலையை எதிர்த்து  முதன்முதலாக வழக்கு தொடர்ந்து விவசாயி கிருஷ்ணமூர்த்தி.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட .அ.பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி விவசாயி இவர்தான் முதன்முதலாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவருக்கு பின்பாக பலர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வழி சாலை குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டது தவறு என்றும் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடமே மீண்டும் அளிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இத் தீர்ப்பு வெளியானது.செய்திகள் வெளியானதை தொடர்ந்து எட்டு வழி சாலை விவகாரத்தில் முதல் முதலாக வழக்கு தொடர்ந்த கிருஷ்ணமூர்த்தி தான் தான் வழக்கு தொடர்ந்ததாகவும் ஆனால் பாமகவினர் அவர்கள்தொடர்ந்த வழக்ககல் தீர்ப்பு பெற்றதைப் போல ஆங்காங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார் இவ்வாறு அவர்கள் பிரச்சாரம் செய்வது கண்டனத்துக்கு உரியது. என்றும் எட்டு வழி சாலை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அன்புமணி பெயரோ அவரது வழக்கறிஞர் பெயர் இடம்பெறவில்லை என்றும் கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கிறார் மேலும் இந்த விவகாரத்தில் பாமகவினர் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த வழக்கில் நான் தொடர்ந்த வழக்குக்காக தான் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என்று விவசாயி பிவி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார் இவர் 8 வழி சாலை எதிர்ப்பு இயக்க தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் எட்டு வழி சாலை பாதிக்கப்படும் பாப்பிரெட்டிப்பட்டி அரூர் பகுதியில் அதிமுக பாமக தேமுதிக பாரதிய ஜனதா கட்சி சார்ந்த வேட்பாளர்களை தோற்கடிப்போம் என்ற வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்களை இவர்கள் பொது மக்களிடம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.