ETV Bharat / state

ஏரியில் குளிக்கச் சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு - கடலூரில் பரிதாபம்! - ஏரியில் குளிக்க சென்ற பெண் மூழ்கி உயிரிழப்பு

கடலூர்: திட்டக்குடி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

cuddalore
cuddalore
author img

By

Published : Dec 16, 2019, 8:21 AM IST

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள பெருமுளை கிராமத்தை சேர்ந்த தமிழ்வாணன் என்பவரின் மனைவி தேன்மொழி(47). அருகிலுள்ள விவசாய நிலங்களில் விவசாய வேலைகள் செய்து வந்த இவர், பருத்திக்காட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். வேலை முடிந்த பின் அங்குள்ள ஏரி ஒன்றில் குளிக்க தண்ணீரில் இறங்கியுள்ளார்.

எதிர்பாராத விதமாக தேன்மொழி ஆழமான பகுதிக்குச் சென்றதால் தண்ணீரில் மூழ்கி உயிரிந்துள்ளார். தேன்மொழி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த அவருடைய கணவர் தேன்மொழியை தேடியுள்ளார்.

அப்போது ஏரிக்கரையோரம் கிடந்த தேன்மொழியின் ஆடைகளைப் பார்த்த அவர், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார். உடனே அங்கு விரைந்து தீயணைப்புத்துறையினர் ஏரியில் இறங்கி தேடியபோது தேன்மொழி சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து திட்டக்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீயணைப்புத் துறையினர் பெண்ணின் உடலை மீட்ட போது

இதையும் படிங்க: தண்ணீர் குட்டையில் மூழ்கி இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள பெருமுளை கிராமத்தை சேர்ந்த தமிழ்வாணன் என்பவரின் மனைவி தேன்மொழி(47). அருகிலுள்ள விவசாய நிலங்களில் விவசாய வேலைகள் செய்து வந்த இவர், பருத்திக்காட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். வேலை முடிந்த பின் அங்குள்ள ஏரி ஒன்றில் குளிக்க தண்ணீரில் இறங்கியுள்ளார்.

எதிர்பாராத விதமாக தேன்மொழி ஆழமான பகுதிக்குச் சென்றதால் தண்ணீரில் மூழ்கி உயிரிந்துள்ளார். தேன்மொழி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த அவருடைய கணவர் தேன்மொழியை தேடியுள்ளார்.

அப்போது ஏரிக்கரையோரம் கிடந்த தேன்மொழியின் ஆடைகளைப் பார்த்த அவர், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார். உடனே அங்கு விரைந்து தீயணைப்புத்துறையினர் ஏரியில் இறங்கி தேடியபோது தேன்மொழி சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து திட்டக்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீயணைப்புத் துறையினர் பெண்ணின் உடலை மீட்ட போது

இதையும் படிங்க: தண்ணீர் குட்டையில் மூழ்கி இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு!

Intro:கடலூரில் ஏரியில் குளித்த பெண் தண்ணீரில் மூழ்கி பலிBody:கடலூர்
டிசம்பர் 15,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பெருமுளை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்வாணன் இவருடைய மனைவி தேன்மொழி (47) இவர் நேற்று அதே பகுதியில் உள்ள பருத்திக்காட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். வேலை முடிந்த பின்னர் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க தண்ணீரில் இறங்கி உள்ளார். ஆழமான பகுதிக்கு தேன்மொழி சென்றதால் தண்ணீரில் மூழ்கினார். மேலும் அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் முழ்கி மூச்சுதிணறி இறந்துள்ளார்.

மாலை வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு வரும் தேன்மொழி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவர் பருத்திகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தேடியுள்ளார். அப்போது அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் தேடி பார்த்தபோது அங்கு கிடந்த ஆடைகளை பார்த்து தமிழ்வாணன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஏரியில் இறங்கி தேடினர். அப்போது தேன்மொழி பிணமாக மீட்கப்பட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து திட்டக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.