கடலூர் பகுதியைச் சுற்றி சுமார் 52 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் சாமியார் பேட்டை என்ற கடலோர கிராம பகுதியில் மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கியது.
![Weather related communication equipment found near cuddalore](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6042149_61_6042149_1581475347558.png)
இதுகுறித்து அப்பகுதி மீனவரான குட்டி, கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் அங்கு விரைந்து வந்த கடலோர காவல்படையினர் அந்தப் பொருளைக் கைப்பற்றினர்.
![Weather related communication equipment found near cuddalore](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6042149_346_6042149_1581475301109.png)
கைபற்றிய பொருள் வானிலை குறித்து தகவல் பரிமாற்றம் செய்யும் மிதவை உபகரணம் என்பதும், அது கரை ஒதுங்கியிருப்பதும் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து கடலோர பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.