ETV Bharat / state

கடலூர் மாவட்டத்தில் 6 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 4:35 PM IST

கடலூர் மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 6 பேர் டெங்குகாய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

six-people-affected-by-dengue-fever-in-cuddalore
கடலூர் மாவட்டத்தில் 6 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு.

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குளிர்ந்த காற்று வீசுவதுடன், பரவலாக மழையும் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்புகளைச் சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஒரு வாரத்திற்கும் மேலாகத் தண்ணீர் தேங்கி நிற்பதால், தற்போது அதில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது.

மேலும், வெயில், மழை என மாறி வருகின்றது இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மாவட்டத்தில் பெரும்பாலானோர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகக் கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகக் காய்ச்சல், சளிக்குச் சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கிடையே தற்போது டெங்குகாய்ச்சல் பாதிப்பும் வேகமெடுத்துள்ளது.

மேலும் கடலூருக்கு அருகாமையில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் நேற்று இரண்டு பெண்கள் டெங்குகாய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில், தற்போது 50 பேர் வரை புதுச்சேரி மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவு வேகம் அதிகரித்துள்ளது.

6 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு: கடலூர் வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 2 பெண்களும், நெய்வேலி, முட்டத்தைச் சேர்ந்த 2 ஆண்களும், பண்ருட்டியை சேர்ந்த 2 பெண்களும் என மொத்தம் 6 பேர் கடந்த சில நாட்களாகக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். இதற்காக அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் அவர்கள் 6 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் வெளியானதில் 6 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 6 பேரும் காய்ச்சல் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர்க்க டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குளிர்ந்த காற்று வீசுவதுடன், பரவலாக மழையும் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்புகளைச் சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஒரு வாரத்திற்கும் மேலாகத் தண்ணீர் தேங்கி நிற்பதால், தற்போது அதில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது.

மேலும், வெயில், மழை என மாறி வருகின்றது இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மாவட்டத்தில் பெரும்பாலானோர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகக் கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகக் காய்ச்சல், சளிக்குச் சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கிடையே தற்போது டெங்குகாய்ச்சல் பாதிப்பும் வேகமெடுத்துள்ளது.

மேலும் கடலூருக்கு அருகாமையில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் நேற்று இரண்டு பெண்கள் டெங்குகாய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில், தற்போது 50 பேர் வரை புதுச்சேரி மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவு வேகம் அதிகரித்துள்ளது.

6 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு: கடலூர் வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 2 பெண்களும், நெய்வேலி, முட்டத்தைச் சேர்ந்த 2 ஆண்களும், பண்ருட்டியை சேர்ந்த 2 பெண்களும் என மொத்தம் 6 பேர் கடந்த சில நாட்களாகக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். இதற்காக அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் அவர்கள் 6 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் வெளியானதில் 6 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 6 பேரும் காய்ச்சல் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர்க்க டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.