ETV Bharat / state

ரவுடியை நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்த இளைஞர்கள்! - சிதம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை

கடலூர்: சிதம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி, ரவுடியை படுகொலை செய்த இரண்டு வாலிபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோழிபாண்டியன்
author img

By

Published : Aug 21, 2019, 12:46 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன் கோழிபாண்டியன்(வயது 35). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற 8 வழக்குகள் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் உள்ளது. இவர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

கோழிபாண்டியன்
கோழிபாண்டியன்

இந்நிலையில் நேற்று இரவு கோழிபாண்டியனும், மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டனும் சாப்பிடுவதற்காக அண்ணாமலை நகரில் இருந்து ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். திடீரென, இருவரும் தாங்கள் கையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கோழிபாண்டியன் மீது வீசினர். அவர் மீது நாட்டு வெடிகுண்டு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் தலை மற்றும் உடல் சிதறி கோழிபாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டனும் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். கோழிபாண்டியன் இறந்ததை உறுதி செய்த இரண்டு வாலிபர்களும், மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இதுபற்றி தகவலறிந்து வந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், அண்ணாமலை நகர் காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ரவுடி கோழிபாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அண்ணாமலை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச்சென்ற இரண்டு வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன் கோழிபாண்டியன்(வயது 35). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற 8 வழக்குகள் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் உள்ளது. இவர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

கோழிபாண்டியன்
கோழிபாண்டியன்

இந்நிலையில் நேற்று இரவு கோழிபாண்டியனும், மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டனும் சாப்பிடுவதற்காக அண்ணாமலை நகரில் இருந்து ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். திடீரென, இருவரும் தாங்கள் கையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கோழிபாண்டியன் மீது வீசினர். அவர் மீது நாட்டு வெடிகுண்டு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் தலை மற்றும் உடல் சிதறி கோழிபாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டனும் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். கோழிபாண்டியன் இறந்ததை உறுதி செய்த இரண்டு வாலிபர்களும், மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இதுபற்றி தகவலறிந்து வந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், அண்ணாமலை நகர் காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ரவுடி கோழிபாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அண்ணாமலை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச்சென்ற இரண்டு வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலைBody:கடலூர்
ஆகஸ்டு 21,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடியை படுகொலை செய்த 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன் கோழிபாண்டியன்(வயது 35). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ைளை வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகள் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் உள்ளது. தற்போது இவர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு கோழிபாண்டியனும், மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டனும் சாப்பிடுவதற்காக அண்ணாமலைநகரில் இருந்து ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அப்போது திடீரென இருவரும் தாங்கள் கையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை கோழிபாண்டியன் மீது வீசினர். இதில் கோழிபாண்டியனின் மீது நாட்டு வெடிகுண்டுகள் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் தலை மற்றும் உடல் சிதறி கோழிபாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மற்றும் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். கோழிபாண்டியன் இறந்ததை உறுதி செய்த பின்னர் 2 வாலிபர்களும், மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ரவுடி கோழிபாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி கோழிபாண்டியனை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையான கோழிபாண்டியனுக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும், அஸ்வின்(8) என்ற மகனும், அஸ்மிதா(5) என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.