ETV Bharat / state

கேரளாவுக்கு மீன்பிடி தொழிலுக்குச் சென்ற மீனவர் மாயம்: ஆட்சியரிடம் உறவினர்கள் கண்ணீர்!

author img

By

Published : Nov 11, 2019, 10:55 PM IST

கடலூர்: மீன்பிடி தொழிலுக்காக கேரளா சென்ற ராசாபேட்டையைச் சேர்ந்த மீனவர், 10 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என்று அவரின் உறவினர்கள் அவரை மீட்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுது மனு அளித்தனர்.

Request to recovery fisherman in Cuddalore, கேரளாவுக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்ற நபர் மாயம் என மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் கதறல்


கடலூர் மாவட்டம் ராசாபேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்களான பரமசிவம், ரவி, பஞ்சன் ஆகியோர் கடந்த ஒன்றாம் தேதி மீன்பிடி தொழிலுக்காக கேரளாவுக்குச் சென்றுள்ளனர். கடந்த வாரம் சனிக்கிழமை தங்கள் உறவினர்களிடம் தொலைபேசியில் பேசிய மீனவர்கள் தாங்கள் தொழிலுக்குச் சென்றுவிட்டோம் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து மறுநாள் பரமசிவம் உடல்நலக் குறைவால் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். இந்நிலையில் செவ்வாய்கிழமை ரவி தனது உறவினர்களுக்குத் தொடர்புகொண்டு, ”நான் எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை, என்னை அடிக்கிறார்கள். என்னை காப்பாற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.

Request to recovery fisherman in Cuddalore, கேரளாவுக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்ற நபர் மாயம் என மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் கதறல்

இதனால் பதட்டமடைந்த ரவியின் உறவினர்கள் கேரளா சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதையடுத்து இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அவர்கள் மனு அளித்துவிட்டு கதறி அழுதனர். இதனிடையே பஞ்சனும் இன்று கரை திரும்பியுள்ளார்.
இதையும் படிங்க: ஓமன் நாட்டில் காணாமல் போன மீனவர்கள் - உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!


கடலூர் மாவட்டம் ராசாபேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்களான பரமசிவம், ரவி, பஞ்சன் ஆகியோர் கடந்த ஒன்றாம் தேதி மீன்பிடி தொழிலுக்காக கேரளாவுக்குச் சென்றுள்ளனர். கடந்த வாரம் சனிக்கிழமை தங்கள் உறவினர்களிடம் தொலைபேசியில் பேசிய மீனவர்கள் தாங்கள் தொழிலுக்குச் சென்றுவிட்டோம் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து மறுநாள் பரமசிவம் உடல்நலக் குறைவால் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். இந்நிலையில் செவ்வாய்கிழமை ரவி தனது உறவினர்களுக்குத் தொடர்புகொண்டு, ”நான் எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை, என்னை அடிக்கிறார்கள். என்னை காப்பாற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.

Request to recovery fisherman in Cuddalore, கேரளாவுக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்ற நபர் மாயம் என மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் கதறல்

இதனால் பதட்டமடைந்த ரவியின் உறவினர்கள் கேரளா சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதையடுத்து இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அவர்கள் மனு அளித்துவிட்டு கதறி அழுதனர். இதனிடையே பஞ்சனும் இன்று கரை திரும்பியுள்ளார்.
இதையும் படிங்க: ஓமன் நாட்டில் காணாமல் போன மீனவர்கள் - உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

Intro:கேரளாவுக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்ற ஒருவர் மாயம் - மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் கதறல்Body:கடலூர்
நவம்பர் 11,

கடலூர் மாவட்டம் ராசாபேட்டை பகுதியை சேர்நத பரமசிவம்,ரவி,பஞ்சன் ஆகிய 3 மீனவர்கள் கேரளாவுக்கு கடந்த 1 ம் தேதி மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை உறவினர்களுக்கு தொலைபேசியில் நாங்கள் தொழிலுக்குச் சென்று விட்டோம் என்று செய்தி கூறியுள்ளனர். பின்னர் பரமசிவம் என்ற மீனவர் உடம்பு சரியில்லை என தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பி விட்டார். ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் பேசிய ரவி இன்னும் மூன்று நாட்களில் ஊர் திரும்புவதாக கூறியிருந்தார் ஆனால் இத்தனை நாட்களாகியும் எவ்வித தொடர்பும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த நாங்களும் கேரளாவிற்கு சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தோம் மேலும் மீனவர் சங்க தலைவரை அழைத்துக்கொண்டும் இங்கு உள்ள மீனவ அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் இன்று பஞ்சன் கரை வந்த நிலையில் ரவி என்பவர் மட்டும் காணவில்லை

கடைசியாக செவ்வாய்கிழமை குடும்பதினரை தொடர்பு கொண்ட ரவி நான் எங்கு இருக்கேன் என்று தெரியவில்லை -என்னை அடிகிறார்கள் காப்பாற்றுங்கள. என்று கூறியுள்ளார் இந்த நிலையில் புல் புல் புயல் காரணமாக வேறு எங்கையாவது கரை ஓதுங்கி மாட்டியுள்ளாரா என அச்சம் உள்ளது எனவே உடனடியாக தன் கனவரை கண்டுபிடித்து தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மகன்கள் உறவினர்கள் அனைவரும் மனு அளித்து கதறி அழுதனர்.

பேட்டி – கங்கா -மீனவர்
பேட்டி -திவ்யா -மனைவிConclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.