ETV Bharat / state

ராஜ முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

author img

By

Published : Mar 18, 2021, 11:02 AM IST

கடலூர்: தமிழ்நாடு அரசாணையை மீறி அதிக கட்டணம் வசூலித்ததால் சிதம்பரம் ராஜ முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 20ஆவது நாள்களாக கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

raja-muthiah-medical-college-students-protest-carrying-black-flag
raja-muthiah-medical-college-students-protest-carrying-black-flag

கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜ முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகக் கூறி அங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் மாவட்ட அரசு கல்லூரியாக திகழும் எனவும், அரசு கட்டணம்தான் வசூலிக்கப்படும் எனவும், தற்போதைய மாணவர்களுக்கும் அது பொருந்தும் எனவும் தமிழ்நாடு அரசு முன்னதாக அரசாணை வெளியிட்டிருந்தது.

இதனை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் இங்கு பழைய கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும், செலுத்தினால்தான் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும், அதேபோல மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் எனவும் மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை கையிலெடுத்து கடந்த 20 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

நேற்று (மார்ச்.17) 20ஆவது நாளாக கருப்புக்கொடி ஏந்தி சுமார் 200க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தைச் சூழ்ந்து கட்டணக் குறைப்பை வலியுறுத்தியும், கல்லூரியை சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது கட்டணக் குறைப்பை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில் "இந்தக் கல்லூரி அரசு கல்லூரி தான் என அரசாங்கம் அரசாணையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தெளிவாகக் கூறிய பின்னரும், கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு கூடுதல் கல்விக் கட்டணத்தை அதாவது 30 மடங்கு கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கிறார்கள். அதேபோல் பணத்தைக் கட்டினால்தான் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும், தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் எனவும் மிரட்டுகின்றனர்.

ராஜ முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

அதேபோல இங்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட உபகரணங்களும் பொதுமக்களுக்கு அதிக கட்டணத்தில்தான் எடுக்கப்படுகிறது. இதனால் இந்த மருத்துவக் கல்லூரி பொதுமக்களுக்கும் பயன்பாட்டில் இல்லை" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'நேற்று ஆட்டோ சவாரி... இன்று சிக்கன் பிரியாணி... இடையில் வலிமை அப்டேட்' - வாகை சூடுவாரா வானதி?

கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜ முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகக் கூறி அங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் மாவட்ட அரசு கல்லூரியாக திகழும் எனவும், அரசு கட்டணம்தான் வசூலிக்கப்படும் எனவும், தற்போதைய மாணவர்களுக்கும் அது பொருந்தும் எனவும் தமிழ்நாடு அரசு முன்னதாக அரசாணை வெளியிட்டிருந்தது.

இதனை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் இங்கு பழைய கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும், செலுத்தினால்தான் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும், அதேபோல மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் எனவும் மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை கையிலெடுத்து கடந்த 20 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

நேற்று (மார்ச்.17) 20ஆவது நாளாக கருப்புக்கொடி ஏந்தி சுமார் 200க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தைச் சூழ்ந்து கட்டணக் குறைப்பை வலியுறுத்தியும், கல்லூரியை சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது கட்டணக் குறைப்பை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில் "இந்தக் கல்லூரி அரசு கல்லூரி தான் என அரசாங்கம் அரசாணையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தெளிவாகக் கூறிய பின்னரும், கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு கூடுதல் கல்விக் கட்டணத்தை அதாவது 30 மடங்கு கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கிறார்கள். அதேபோல் பணத்தைக் கட்டினால்தான் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும், தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் எனவும் மிரட்டுகின்றனர்.

ராஜ முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

அதேபோல இங்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட உபகரணங்களும் பொதுமக்களுக்கு அதிக கட்டணத்தில்தான் எடுக்கப்படுகிறது. இதனால் இந்த மருத்துவக் கல்லூரி பொதுமக்களுக்கும் பயன்பாட்டில் இல்லை" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'நேற்று ஆட்டோ சவாரி... இன்று சிக்கன் பிரியாணி... இடையில் வலிமை அப்டேட்' - வாகை சூடுவாரா வானதி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.