ETV Bharat / state

திட்டக்குடியில் உள்ள மணல் குவாரியை மூட பொதுமக்கள் வலியுறுத்தல்! - illamanagalam sand quarry issue

கடலூர்: திட்டக்குடியை அடுத்த தி.இளமங்கலம் பகுதியில் விதிகளை மீறி இயங்கி வரும் மணல்குவாரியை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

people-protest-against-cuddalore-sand-quarry
author img

By

Published : Oct 1, 2019, 11:10 PM IST

திட்டக்குடியை அடுத்த தி.இளமங்கலம் பகுதியில் மணல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி 239 மாட்டுவண்டிகளில் மணல் அள்ளுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தினமும் சுமார் ஆயிரம் மாட்டுவண்டிகள் முறைகேடாக மணல் அள்ளிவருகின்றன என்றும் இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

நாளுக்குநாள் மணல் அள்ளுவது அதிகரித்துகொண்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் விதிகளுக்கு புறம்பாக இயங்கும் தி.இளமங்கலம் மணல்குவாரியை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல் அள்ளிய மாட்டுவண்டியை சிறைப்பிடித்த மக்கள்

மேலும், திட்டக்குடி,கூத்தப்பன்குடிகாடு, மணல்மேடு பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் விதிகளை மீறி மணல் அள்ளிய மாட்டுவண்டிகளை சிறைப்பிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மணல் குவாரியின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு - கொட்டும் மழையில் மக்கள் சாலை மறியல்!

திட்டக்குடியை அடுத்த தி.இளமங்கலம் பகுதியில் மணல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி 239 மாட்டுவண்டிகளில் மணல் அள்ளுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தினமும் சுமார் ஆயிரம் மாட்டுவண்டிகள் முறைகேடாக மணல் அள்ளிவருகின்றன என்றும் இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

நாளுக்குநாள் மணல் அள்ளுவது அதிகரித்துகொண்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் விதிகளுக்கு புறம்பாக இயங்கும் தி.இளமங்கலம் மணல்குவாரியை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல் அள்ளிய மாட்டுவண்டியை சிறைப்பிடித்த மக்கள்

மேலும், திட்டக்குடி,கூத்தப்பன்குடிகாடு, மணல்மேடு பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் விதிகளை மீறி மணல் அள்ளிய மாட்டுவண்டிகளை சிறைப்பிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மணல் குவாரியின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு - கொட்டும் மழையில் மக்கள் சாலை மறியல்!

Intro:விதிகளுக்கு புறம்பாக செயல்படும் திட்டக்குடி இளமங்கலம் மணல்குவாரியை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
Body:கடலூர்
அக்டோபர் 1,

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த தி.இளமங்கலம் பகுதியில் மாட்டுவண்டி மணல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் தினசரி 239மாட்டுவண்டிகளுக்கு மட்டுமே மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் ஆயிரம் மாட்டுவண்டிகள் முறைகேடாக மணல் அள்ளிவருகின்றன என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் இதனால் வெள்ளாற்றின் கரையோரம் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு விதிகளுக்கு புறம்பாக செயல்படும் தி.இளமங்கலம் மணல்குவாரியை மூட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பட்டாதாரர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திட்டக்குடி கூத்தப்பன்குடிகாடு, மணல்மேடு பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் விதிகளை மீறி மணல் அள்ளிய 239 மாட்டுவண்டிகளை சிறைப்பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல் மற்றும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீப்ரியா சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.