ETV Bharat / state

என்எல்சி பாய்லர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஒருவர் பலி

author img

By

Published : May 8, 2020, 11:02 PM IST

கடலூர்: நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து நடந்த தீ விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

என்எல்சி பாய்லர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஒருவர் பலி
One died in fire accident happened in Neyveli Lignite Corporation

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் அலகு 6ல் பாய்லர் வெடித்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தில் அங்கு பணிபுரிந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் என்எல்சி நிறுவன மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி, சென்னை ஆகிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சர்புதீன் என்ற நிரந்தர தொழிலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது விபத்தில் காயமடைந்த மீதமுள்ள 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஊரடங்கால் தடைபட்ட நிகழ்ச்சிகள்... வருவாயிழந்து தவிக்கும் ஒலி-ஒளி, டெக்கரேஷன் அமைப்பாளர்கள்!

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் அலகு 6ல் பாய்லர் வெடித்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தில் அங்கு பணிபுரிந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் என்எல்சி நிறுவன மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி, சென்னை ஆகிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சர்புதீன் என்ற நிரந்தர தொழிலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது விபத்தில் காயமடைந்த மீதமுள்ள 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஊரடங்கால் தடைபட்ட நிகழ்ச்சிகள்... வருவாயிழந்து தவிக்கும் ஒலி-ஒளி, டெக்கரேஷன் அமைப்பாளர்கள்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.