ETV Bharat / state

வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து 35பவுன் நகைகள் கொள்ளை! - ஜன்னல் கதவின் கம்பிகளை உடைத்து 35பவுன் நகை கொள்ளை

கடலூர் : விருத்தாசலம் அருகே வீட்டின் ஜன்னல் கதவின் கம்பிகளை உடைத்து 35பவுன் நகைகளும், ரூ.6ஆயிரமும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து, வீட்டின் உரிமையாளர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

பீரோவில் இருந்த நகைகள் திருட்டு
author img

By

Published : Sep 16, 2019, 3:27 PM IST

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் முத்தமிழ் தெருவில் வசிப்பவர் அன்பழகன். இவர், ஓய்வுபெற்ற அஞ்சல்துறை இளநிலை உதவியாளர். இவர் கடந்த 6ஆம் தேதி தனது மனைவியுடன் ஒரிசாவிலுள்ள கோயிலுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று வீடு திரும்பிய அன்பழகன், வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிய நிலையில் கிடந்ததுள்ளது.பின்பு, பீரோவை சோதனை செய்ததில் அதில் இருந்த 35பவுன் நகையும், ரூ.6ஆயிரமும் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிப்பப் பட்டது தெரியவந்தது.

திருட்டு நடந்த வீடு

இதனைத் தொடர்ந்து அன்பழகன் விருத்தாசலம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் முத்தமிழ் தெருவில் வசிப்பவர் அன்பழகன். இவர், ஓய்வுபெற்ற அஞ்சல்துறை இளநிலை உதவியாளர். இவர் கடந்த 6ஆம் தேதி தனது மனைவியுடன் ஒரிசாவிலுள்ள கோயிலுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று வீடு திரும்பிய அன்பழகன், வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிய நிலையில் கிடந்ததுள்ளது.பின்பு, பீரோவை சோதனை செய்ததில் அதில் இருந்த 35பவுன் நகையும், ரூ.6ஆயிரமும் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிப்பப் பட்டது தெரியவந்தது.

திருட்டு நடந்த வீடு

இதனைத் தொடர்ந்து அன்பழகன் விருத்தாசலம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வீட்டின் சன்னல் கதவின் கம்பிகளை உடைத்து 35 பவுன் நகைகள் கொள்ளை.
Body:கடலூர்
செப்டம்பர் 16,

கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் முத்தமிழ் தெருவில் வசிப்பவர் அன்பழகன் (அஞ்சல்துறை இளநிலை உதவியாளர் ஒய்வு). இவர் கடந்த 6 ஆம் தேதி தனது மனைவியுடன் ஒரிசாவிலுள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் இன்று தனது மனைவியுடன் வீட்டிற்கு வந்த அன்பழகன் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் பீரோவில் கதவு திறக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிய நிலையில் கிடந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் பின்புறமுள்ள பக்கவாட்டு சன்னல் கதவின் கம்பிகளை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.ேமேலும் பீரோ மற்றும் பெட் சீட் அடிப்பகுதியில் வைத்து இருந்த 35 பவுன் நகைகள் மற்றும் 6 ஆயிரம் ரூபாய் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதைக் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அன்பழகன் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.