ETV Bharat / state

கடலூரில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

author img

By

Published : Jul 24, 2020, 10:42 PM IST

Updated : Jul 24, 2020, 10:59 PM IST

கடலூர்: மாவட்டத்தில் இன்று புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,158 ஆக உயர்ந்துள்ளது.

In Cuddalore today, 91 people were diagnosed with corona infection in a single day
In Cuddalore today, 91 people were diagnosed with corona infection in a single day

தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று (ஜூலை 24) ஒரே நாளில் 6 ஆயிரத்து 785 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக கடலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 91 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,158 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,523ஆக உயர்ந்துள்ளது. இன்று மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று (ஜூலை 24) ஒரே நாளில் 6 ஆயிரத்து 785 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக கடலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 91 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,158 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,523ஆக உயர்ந்துள்ளது. இன்று மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Last Updated : Jul 24, 2020, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.