ETV Bharat / state

கடலூரில் கள்ளச்சாரய விற்பனை அமோகம்: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

author img

By

Published : Oct 17, 2019, 8:52 AM IST

கடலூர்: கள்ளச்சாரயம் தயாரித்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் உள்ளிட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குண்டர் சட்டத்தில் கைதானவர்கள்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அடுத்த நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த பார்வதி என்பவரது வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பதாக கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தபோது, ஆயிரத்து 120 லிட்டர் எரிசாராயம் மற்றும் போலி ஸ்டிக்கர், பாட்டில் வைத்திருந்தை கண்டுபிடித்தனர்.

பின்னர் கள்ளச்சாராயம் தயாரித்த காட்டுமன்னார்கோயில் பகுதியை சேர்ந்த சின்னமொட்டையன் (எ) சதீஷ்குமார்(28) மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னப்பராஜ்(35 ) ஆகியோரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதேபோல் கடலூர் மாவட்டம் மேலகுண்டலபாடி ரயில்வே கேட் பகுதியில் கள்ளசாராயம் விற்பனை செய்த பெராம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி கடலூர் மாவட்டம், பணங்காட்டு பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனை செய்யப்படுவதாக முத்துநகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது, வனிதா என்பவரது வீட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர், வீட்டில் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த ஒருமாத காலத்தில் இதுவரை பெண் உள்ளிட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது!

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அடுத்த நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த பார்வதி என்பவரது வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பதாக கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தபோது, ஆயிரத்து 120 லிட்டர் எரிசாராயம் மற்றும் போலி ஸ்டிக்கர், பாட்டில் வைத்திருந்தை கண்டுபிடித்தனர்.

பின்னர் கள்ளச்சாராயம் தயாரித்த காட்டுமன்னார்கோயில் பகுதியை சேர்ந்த சின்னமொட்டையன் (எ) சதீஷ்குமார்(28) மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னப்பராஜ்(35 ) ஆகியோரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதேபோல் கடலூர் மாவட்டம் மேலகுண்டலபாடி ரயில்வே கேட் பகுதியில் கள்ளசாராயம் விற்பனை செய்த பெராம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி கடலூர் மாவட்டம், பணங்காட்டு பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனை செய்யப்படுவதாக முத்துநகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது, வனிதா என்பவரது வீட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர், வீட்டில் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த ஒருமாத காலத்தில் இதுவரை பெண் உள்ளிட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது!

Intro:கடலூரில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்த பெண் உட்பட 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுBody:கடலூர்
அக்டோபர் 16,

கடலூர் மாவட்டம் மேலகுண்டலபாடி ரயில்வேகேட்பகுதியில் கள்ளசாராயம் விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி அண்ணாமலை நகர் காவல்நிலைய ஆய்வாளர் தேவேந்திரன் மற்றும் போலீசார் சாராய வழக்கு சம்பந்தமாக மேலகுண்டலபாடி ரயில்வேகேட் அருகில் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெராம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன் ராமலிங்கம் சாராயம் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது இதனைத்தொடர்ந்து போலீசார் ராமலிங்கத்திடம் இருந்து சுமார் 120 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே சிதம்பரம் மதுவிலக்கு அமல் பிரிவு ,அண்ணாமலை நகர் காவல் நிலையங்களில் 6 சாராய வழக்குகள் உள்ளன.இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் ராமலிங்கம் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.

அதேபோல் கடந்த 9 ஆம் தேதி கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் பால்சுதர் மற்றும் போலீஸார் பணங்காட்டு காலனி பகுதியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் வனிதா (49) வீட்டின் பின்புறம் சுமார் 110 சாராயம் லிட்டர் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது ஏற்கனவே கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் 7 சாராய வழக்குகள் உள்ளன. இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் வனிதா குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.

கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி காட்டுமன்னார்கோயில் நாட்டார்மங்கலம் செட்டிதெருவில் உள்ள பார்வதி என்பவரது வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். சாராயம் தயாரிக்க சுமார் 1120 லிட்டர் எரிசாராயம் மற்றும் போலி ஸ்டிக்கர், கார்க், பாட்டில் வைத்திருந்தை கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் தலைமையில் காவல் ஆய்வாளர் வீரமணி மற்றும் போலீசார் சகிதம் பறிமுதல் செய்தனர்.அப்போது காட்டுமன்னார்கோயில் பகுதியை சேர்ந்த மணிவேல் என்பவரின் மகன் சின்னமொட்டையன் (எ) சதீஷ்குமார்(28) மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவரின் மகன் சின்னப்பராஜ் (35)என்பவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.இவர்களின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் சதீஷ்குமார் மற்றும் சின்னப்பராஜ் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.