ETV Bharat / state

கடலூரில் மேலும் நான்கு பேருக்கு கரோனா!

author img

By

Published : May 25, 2020, 9:23 AM IST

கடலூர்: சென்னைக்கு அடுத்து கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான கடலூரில் புதிதாக மேலும் நான்கு பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும்வகையில் நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதில், தமிழ்நாட்டில் மே 31ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

போர்க்கால அடிப்படையில், கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் நிலையிலும், தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருகிறது.

சென்னைக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமான கடலூரில் முன்னதாக 423 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மேலும் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து கடலூரில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 427 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.

தவிர, அம்மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு இதுவரை 411 பேர் வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் நான்கு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : கடலூரில் 1,500 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கிய திமுக

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும்வகையில் நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதில், தமிழ்நாட்டில் மே 31ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

போர்க்கால அடிப்படையில், கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் நிலையிலும், தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருகிறது.

சென்னைக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமான கடலூரில் முன்னதாக 423 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மேலும் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து கடலூரில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 427 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.

தவிர, அம்மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு இதுவரை 411 பேர் வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் நான்கு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : கடலூரில் 1,500 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கிய திமுக

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.