ETV Bharat / state

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வாங்கித் தரப்படும் - அமைச்சர் சம்பத்

author img

By

Published : Jun 23, 2019, 4:41 PM IST

கடலுார்: ஆரூரான் சர்க்கரை ஆலையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வாங்கித் தரப்படும் என கடலூரில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பேட்டியளித்துள்ளார்.

minister

கடலூரில் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். இந்த வேலைவாய்ப்பு முகாமை தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.

இந்தத் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 120 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 1,442 பொறியியல் பட்டதாரிகள், 2,690 அறிவியல்; கலைப் பட்டதாரிகள், 282 கலை; அறிவியல் முதுகலைப் பட்டதாரிகள், 1,306 பட்டயத் துறையில் பயின்றவர்கள், மூன்றாயிரத்து 475 பத்தாம் வகுப்பு - பன்னிரெண்டாம் வகுப்பு கல்வித் தகுதி உடைய மொத்தம் 10 ஆயிரத்து 694 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அமைச்சர் சம்பத் பேட்டி
மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் 7 நபர்களுக்கு திருமண உதவியாக 64 கிராம் தங்கமும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையும், இரண்டு பயனாளிகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியால் இயங்கக்கூடிய சக்கர நாற்காலியும் தொழில் துறை அமைச்சர் சம்பத் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, ஆரூரான் சர்க்கரை ஆலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வாங்கித் தரப்படும் எனவும், அதன் உரிமையாளர் ராம் வி. தியாகராஜன் விசாரணையில் உரிய இழப்பீடு வழங்குவதாக உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் இது குறித்து ராம் வி. தியாகராஜனிடம் வலியுறுத்தப்படும் என அவர் கூறினார்.

கடலூரில் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். இந்த வேலைவாய்ப்பு முகாமை தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.

இந்தத் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 120 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 1,442 பொறியியல் பட்டதாரிகள், 2,690 அறிவியல்; கலைப் பட்டதாரிகள், 282 கலை; அறிவியல் முதுகலைப் பட்டதாரிகள், 1,306 பட்டயத் துறையில் பயின்றவர்கள், மூன்றாயிரத்து 475 பத்தாம் வகுப்பு - பன்னிரெண்டாம் வகுப்பு கல்வித் தகுதி உடைய மொத்தம் 10 ஆயிரத்து 694 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அமைச்சர் சம்பத் பேட்டி
மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் 7 நபர்களுக்கு திருமண உதவியாக 64 கிராம் தங்கமும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையும், இரண்டு பயனாளிகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியால் இயங்கக்கூடிய சக்கர நாற்காலியும் தொழில் துறை அமைச்சர் சம்பத் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, ஆரூரான் சர்க்கரை ஆலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வாங்கித் தரப்படும் எனவும், அதன் உரிமையாளர் ராம் வி. தியாகராஜன் விசாரணையில் உரிய இழப்பீடு வழங்குவதாக உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் இது குறித்து ராம் வி. தியாகராஜனிடம் வலியுறுத்தப்படும் என அவர் கூறினார்.
Intro:ஆரூரான் சர்க்கரை ஆலையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வாங்கி தரப்படும் கடலூரில் தொழில் துறை அமைச்சர் எம் சி சம்பத் பேட்டி


Body:கடலூர்
ஜூன் 23,

கடலூரில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தலைமை தாங்கினார் மற்றும் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 120 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1442 பொறியியல் பட்டதாரிகள் 2690 அறிவியல் மற்றும் கலைப் பட்டதாரிகள் 282 கலை மற்றும் அறிவியல் முதுகலைப் பட்டதாரிகள் 1306 டிப்ளமோ துறையில் பயின்றவர்கள் 3 ஆயிரத்து 475 பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு கல்வித் தகுதி உடைய மொத்தம் 10 ஆயிரத்து 694 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் 7 நபர்களுக்கு திருமண உதவியாக 64 கிராம் தங்கமும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து காண காசோலை மேலும் இரண்டு பயனாளிகளுக்கு தலா ரூபாய் 75 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியால் இருக்கக்கூடிய சக்கர நாற்காலியும் தொழில்துறை அமைச்சர் சம்பத் தொடங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; ஆரூரான் சர்க்கரை ஆலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வாங்கி தரப்படும். சக்கரை ஆலையின் உரிமையாளர் ராம் வி.தியாகராஜன் விசாரணையில் அவர் உரிய இழப்பீடு வழங்குவதாக உத்தரவாதம் அளித்தார் இதனை தொடர்ந்து அவரை விடுவிக்கப்பட்டார் மேலும் இது குறித்து ராம் வி.தியாகராஜனிடம் வலியுறுத்தப்படும் என கூறினார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.