ETV Bharat / state

கடலுக்குள் செல்ல தடையால் வாழ்வாதாரம் பாதிப்பு: மீனவர்கள் வேதனை!

கடலூர்: படகு எரிப்பு விவகாரத்தில் மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

author img

By

Published : Jul 30, 2019, 4:41 PM IST

band to fishing


கடலூரில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி ஒரு சில கிராம மீனவர்கள் மீன்பிடித்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் கிராம மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் எம்ஜிஆர் திட்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுக்கு தீ வைத்தனர்.

கடலுக்குள் செல்ல தடையால் வாழ்வாதாரம் பாதிப்பு: மீனவர்கள் வேதனை

இதனால் அங்கு பதட்டம் நீடித்ததைத் தொடர்ந்து ஏடிஎஸ்பி பாண்டியன், சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டது. இதைத்தொடர்ந்து மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் இந்த உத்தரவால் தங்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


கடலூரில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி ஒரு சில கிராம மீனவர்கள் மீன்பிடித்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் கிராம மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் எம்ஜிஆர் திட்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுக்கு தீ வைத்தனர்.

கடலுக்குள் செல்ல தடையால் வாழ்வாதாரம் பாதிப்பு: மீனவர்கள் வேதனை

இதனால் அங்கு பதட்டம் நீடித்ததைத் தொடர்ந்து ஏடிஎஸ்பி பாண்டியன், சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டது. இதைத்தொடர்ந்து மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் இந்த உத்தரவால் தங்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Intro:படகு எரிப்பு சம்பவம் மறு அறிவிப்பு வரும் வரை கடலூர் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு மற்ற கிராம மீனவர்கள் வேதனை
Body:கடலூர்
ஜூன் 30,

கடலூரில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி ஒரு சில கிராம மீனவர்கள் மீன் பிடித்து விற்பனை செய்து வந்தனர் இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் கிராம மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது மர்ம நபர்களால் எம்ஜிஆர் திட்டு பகுதியைச் சேர்ந்த மீனவர் படகு தீ வைத்து எரிக்கப்பட்டது இதனால் இரு கிராம மீனவர்களுக்கு இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானது இதைத்தொடர்ந்து கடலூர் ஏடிஎஸ்பி பாண்டியன் மற்றும் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார். இதனால் மற்ற மீனவர்கள் கிராமங்களின் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் ஒரு சிலர் செய்த தவறுகளால் ஒட்டுமொத்த மாவட்டத்தையே மீன் பிடிக்கச் செல்ல கூடாது என தெரிவிப்பது வேதனைக்குரியது என தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.