ETV Bharat / state

பெண் பக்தரை அறைந்த அர்ச்சகரை கைது செய்யக்கோரி ஆர்பாட்டம்!

author img

By

Published : Nov 23, 2019, 12:09 PM IST

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, இதுவரை அவரை கைது செய்யாததை கண்டித்து திராவிடர் கழகத்தினர் இன்று கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

protest to arrest chidambaram temple priest who beat the lady

சிதம்பரம் வ.உசி. தெருவைச் சேர்ந்த லதா என்ற பெண் பக்தர் கடந்த சனிக்கிழமையன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வழிபடச் சென்றார். அப்போது, முக்குறுணி விநாயகர் சன்னதியில் பூஜையில் இருந்த அர்ச்சகர் தர்ஷன், லதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கன்னத்தில் அறைந்தார்.

சம்பவம் குறித்து லதா அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவலர்கள், அர்ச்சகர் தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தச்சூழ்நிலையில், கோயில் அர்ச்சகரைக்கண்டித்தும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இதுவரை அவரை கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்தும் சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன், " பெண் பக்தரை தாக்கிய அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை இதுவரை அவரை கைது செய்யவில்லை. தமிழ்நாடு அரசின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

பெண் பக்தரை கண்ணத்தில் அறைந்த அர்ச்சகரை கைது செய்ய கோரி கண்டன ஆர்பாட்டம்

சிதம்பரம் கோயிலை பொறுத்தவரை இங்குள்ள அர்ச்சகர்கள் தட்டில் காசு போடுவதற்கு ஏற்பவே தீபாராதனை செய்வார்கள். இவற்றையெல்லாம் போக்க சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையே ஏற்று நடத்த வேண்டும். பக்தர்கள் தட்டில் காசு போடாமல் உண்டியலில் காணிக்கை செலுத்தும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ’பாலில் நச்சுத்தன்மை மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ - ராஜேந்திர பாலாஜி

சிதம்பரம் வ.உசி. தெருவைச் சேர்ந்த லதா என்ற பெண் பக்தர் கடந்த சனிக்கிழமையன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வழிபடச் சென்றார். அப்போது, முக்குறுணி விநாயகர் சன்னதியில் பூஜையில் இருந்த அர்ச்சகர் தர்ஷன், லதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கன்னத்தில் அறைந்தார்.

சம்பவம் குறித்து லதா அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவலர்கள், அர்ச்சகர் தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தச்சூழ்நிலையில், கோயில் அர்ச்சகரைக்கண்டித்தும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இதுவரை அவரை கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்தும் சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன், " பெண் பக்தரை தாக்கிய அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை இதுவரை அவரை கைது செய்யவில்லை. தமிழ்நாடு அரசின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

பெண் பக்தரை கண்ணத்தில் அறைந்த அர்ச்சகரை கைது செய்ய கோரி கண்டன ஆர்பாட்டம்

சிதம்பரம் கோயிலை பொறுத்தவரை இங்குள்ள அர்ச்சகர்கள் தட்டில் காசு போடுவதற்கு ஏற்பவே தீபாராதனை செய்வார்கள். இவற்றையெல்லாம் போக்க சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையே ஏற்று நடத்த வேண்டும். பக்தர்கள் தட்டில் காசு போடாமல் உண்டியலில் காணிக்கை செலுத்தும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ’பாலில் நச்சுத்தன்மை மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ - ராஜேந்திர பாலாஜி

Intro:சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி கும்பிட சென்ற பெண் பக்தரை தாக்கிய தீட்சிதரை கைது செய்யக்கோரி சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கம். உடனடியாக தீட்சிதரை காவல்துறை கைது செய்ய வலியுறுத்தல்Body:சிதம்பரம் வ.உசி. தெருவைச் சேர்ந்த லதா என்ற பெண் பக்தர் கடந்த சனிக்கிழமையன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது முக்குறுணி விநாயகர் சன்னதியில் பூஜையில் இருந்த தர்ஷன் தீட்சிதர் என்பவர் லதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கன்னத்தில் அறைந்து கொடூரமாக தாக்கினார். இச்சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார், தீட்சிதர் தர்ஷன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் கோவிலுக்கு சென்ற பெண் பக்தரை தாக்கிய தீட்சிதருக்கும், அவர் மீது வழக்குப் பதிவு செய்தும் இதுவரை கைது செய்யாத காவல் துறைக்கும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இன்று சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோயில் தீட்சிதரைக் கண்டித்தும், அவர் மீது வழக்குப் பதிவு செய்தும் இதுவரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன்,

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற சென்ற பெண் பக்தரை தீட்சிதர் கடுமையாகத் தாக்கி உள்ளார். இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்தும் இதுவரை அந்த தீட்சிதரை கைது செய்யவில்லை. தமிழக அரசின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது. சிதம்பரம் கோயிலை பொறுத்தவரை இங்குள்ள தீட்சிதர்கள் தட்டில் காசு போடுவதற்கு ஏற்பவே தீபாராதனை செய்வார்கள். இவற்றையெல்லாம் போக்க சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையே ஏற்று நடத்த வேண்டும். பக்தர்கள் தட்டில் காசு போடாமல் உண்டியலில் காணிக்கை செலுத்தும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் எனவும் கூறினார்.

பேட்டி.

திரு. துரை. சந்திரசேகரன், மாநில பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.