ETV Bharat / state

தந்தையை சரமாரியாக கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது!

author img

By

Published : May 31, 2020, 9:18 PM IST

கடலூர்: குடிபோதையில் தகராறு செய்த தந்தையைக் கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தையை சரமாரியாக கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது!
தந்தையை சரமாரியாக கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது!

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த விசூர் காலனியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி (47). விவசாயியான இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தினந்தோறும் சுந்தரபாண்டி குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து, அவர்களை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சுந்தரபாண்டி வழக்கம்போல் குடித்துவிட்டு, குடிபோதையில் வீட்டில் உள்ளோரிடம் தகராறு செய்துள்ளார். இதனை அவருடைய மகன் அலெக்ஸ் (26) கண்டித்துள்ளார்.

இதனால் அவர்கள் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அலெக்ஸ், வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தந்தையை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த சுந்தரபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதையடுத்து அலெக்ஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்திற்கு, இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் சுந்தரபாண்டியின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய அலெக்ஸை தேடி வந்தனர். அப்போது பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பதுங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, அவரை காவல் துறையினர் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

இதையும் படிங்க: தந்தையை கொலை செய்த மகன் கைது!

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த விசூர் காலனியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி (47). விவசாயியான இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தினந்தோறும் சுந்தரபாண்டி குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து, அவர்களை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சுந்தரபாண்டி வழக்கம்போல் குடித்துவிட்டு, குடிபோதையில் வீட்டில் உள்ளோரிடம் தகராறு செய்துள்ளார். இதனை அவருடைய மகன் அலெக்ஸ் (26) கண்டித்துள்ளார்.

இதனால் அவர்கள் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அலெக்ஸ், வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தந்தையை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த சுந்தரபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதையடுத்து அலெக்ஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்திற்கு, இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் சுந்தரபாண்டியின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய அலெக்ஸை தேடி வந்தனர். அப்போது பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பதுங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, அவரை காவல் துறையினர் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

இதையும் படிங்க: தந்தையை கொலை செய்த மகன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.