ETV Bharat / state

இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஆணை - கடலூரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

கடலூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின் அடிப்படையில் இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஆணை
author img

By

Published : Oct 24, 2019, 6:32 AM IST

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார், ரத்னா தம்பதியினர். கடந்த ஜனவரி மாதம் சிவக்குமார் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், அருணா ஆகியோர் ஜாமினில் விடுதலையாகி வெளியில் வந்துள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி விருத்தாசலம் மார்க்கெட் சென்றிருந்த ரத்னாவை வழிமறித்த கார்த்திகேயன் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் ரத்னா அளித்த புகாரின் அடிப்படையில் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கார்த்திகேயனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவின் அடிப்படையில் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கார்த்திகேயனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

இதேபோல், கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி நெய்வேலி டவுன்ஷிப் எம்.ஆர்.கே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செல்வகுமார் (30) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை அப்பகுதியைச் சேர்ந்த கட்டையன் (எ) தர்மசீலன் (26) என்பவர் வழிப்பறிச் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து செல்வகுமார் கொடுத்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தர்மசீலனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே தர்மசீலன் ஏழு வழக்குகள் உள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பரிந்துரையால் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் அவரை குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார், ரத்னா தம்பதியினர். கடந்த ஜனவரி மாதம் சிவக்குமார் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், அருணா ஆகியோர் ஜாமினில் விடுதலையாகி வெளியில் வந்துள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி விருத்தாசலம் மார்க்கெட் சென்றிருந்த ரத்னாவை வழிமறித்த கார்த்திகேயன் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் ரத்னா அளித்த புகாரின் அடிப்படையில் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கார்த்திகேயனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவின் அடிப்படையில் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கார்த்திகேயனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

இதேபோல், கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி நெய்வேலி டவுன்ஷிப் எம்.ஆர்.கே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செல்வகுமார் (30) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை அப்பகுதியைச் சேர்ந்த கட்டையன் (எ) தர்மசீலன் (26) என்பவர் வழிப்பறிச் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து செல்வகுமார் கொடுத்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தர்மசீலனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே தர்மசீலன் ஏழு வழக்குகள் உள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பரிந்துரையால் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் அவரை குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார்.

இதையும் படியுங்க :

அரசு அனுப்பிய தீர்மானத்தை ஆளுநர் நிராகரிக்க சட்டத்தில் இடமில்லை - வைகோ கருத்து

Intro:கடலூரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வாலிபர் கைதுBody:கடலூர்
அக்டோபர் 23,

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த திரு.வி.க. நகர் பகுதியே சேர்ந்தவர் சிவக்குமார் இவருடைய மனைவி ரத்னா (34). இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சிவக்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன் மற்றும் அருணா ஆகியோர் ஜாமீனில் விடுதலையாகி வெளியில் வந்துள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 29-ந்தேதி காலை 8 மணிக்கு ரத்னா காய்கறிகள் வாங்குவதற்காக விருத்தாசலம் மார்க்கெட்டுக்கு சென்றிருந்தார். அப்போது ரத்னாவை கார்த்திகேயன் வழிமறித்து ஆபாசமாக திட்டி, நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ரத்னா விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த விருத்தாசலம் போலீஸார் கார்த்திக் என்ற கார்த்திகேயன் (30) கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். இதையடுத்து கார்த்திகேயனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கைது செய்தார்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.