கடலூர் மாவட்டம் என்எல்சி அனல் மின் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை காவலராக ஆந்திர மாநிலத் சேர்ந்த எக்கேலா கணபதி (33) பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சந்தோஜி (24) இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் நெய்வேலி புதுநகர் 22 வட்டம் ஹாஸ்டல் டைப் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று முன்தினம்(ஆக.5) இரவு இருவருக்கும் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த எக்கேலா கணபதி தனது மனைவி சந்தோஜியின் கழுத்தை நைலான் கயிறு கொண்டு இறுக்கி உள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரும் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்காமல் மூடி இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே எட்டி பார்த்து உள்ளனர். அப்போது எக்கேலா கணபதி தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார்.
உடனே இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெர்மல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவருடைய மனைவியும் பிணமாக கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இருவரின் உடலையும் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை கொன்று தற்கொலை செய்துகொண்ட மத்திய பாதுகாப்பு படை வீரர் - பாதுகாப்பு படை வீரர் தற்கொலை
கடலூர்: நெய்வேலி அனல் மின் நிலையத்தின் மத்திய பாதுகாப்பு படை வீரர் மனைவியின் கழுத்தை இறுக்கி கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
![மனைவியை கொன்று தற்கொலை செய்துகொண்ட மத்திய பாதுகாப்பு படை வீரர் தற்கொலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-north-indian-youth-murder-issue-0608newsroom-1596723885-262.jpg?imwidth=3840)
கடலூர் மாவட்டம் என்எல்சி அனல் மின் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை காவலராக ஆந்திர மாநிலத் சேர்ந்த எக்கேலா கணபதி (33) பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சந்தோஜி (24) இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் நெய்வேலி புதுநகர் 22 வட்டம் ஹாஸ்டல் டைப் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று முன்தினம்(ஆக.5) இரவு இருவருக்கும் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த எக்கேலா கணபதி தனது மனைவி சந்தோஜியின் கழுத்தை நைலான் கயிறு கொண்டு இறுக்கி உள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரும் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்காமல் மூடி இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே எட்டி பார்த்து உள்ளனர். அப்போது எக்கேலா கணபதி தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார்.
உடனே இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெர்மல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவருடைய மனைவியும் பிணமாக கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இருவரின் உடலையும் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.