ETV Bharat / state

வீராணம் ஏரியிலிருந்து வினாடிக்கு 48 கன அடி நீர் திறப்பு! - வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.61 அடி

கடலூர்: வீராணம் ஏரி தன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் சென்னைக்கு வினாடிக்கு 48 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு வினாடிக்கு 48 கனஅடி குடிநீர்!
author img

By

Published : Sep 8, 2019, 11:38 PM IST

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி இம்மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது. சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

கடல் போல காட்சியளிக்கும் கடலூர் மாவட்ட வீராணம் ஏரி

இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுதால் நீர் கரைபுரண்டு கல்லனை, கீழணை நோக்கி வந்தது. இந்த நீரின் அளவு கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியில் 5 அடியை எட்டியதும், வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 737 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து தற்போது 46.61 அடியை எட்டிய கடல் போல் காட்சி அளிக்கிறது. வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் சென்னைக்கு கூடுதலாக வினாடிக்கு 48 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி இம்மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது. சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

கடல் போல காட்சியளிக்கும் கடலூர் மாவட்ட வீராணம் ஏரி

இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுதால் நீர் கரைபுரண்டு கல்லனை, கீழணை நோக்கி வந்தது. இந்த நீரின் அளவு கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியில் 5 அடியை எட்டியதும், வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 737 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து தற்போது 46.61 அடியை எட்டிய கடல் போல் காட்சி அளிக்கிறது. வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் சென்னைக்கு கூடுதலாக வினாடிக்கு 48 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

Intro:வீராணம் ஏரி தன் முழு கொள்ளவை எட்டி வருகிறது - சென்னைக்கு குடிநீர் தேவைக்கு 48 கன அடி நீர் அனுப்படுகிறது
Body:கடலூர்
செப்டம்பர் 8,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது.
ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.


அதுமட்டுமின்றி சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் முக்கிய பங்கு இந்த ஏரிக்கு உண்டு.


இந்த நிலையில் மேட்டூர் அணையில் முழுகொள்ளை எட்டியுள்ளதால் நீர் கரைபுறண்டு கல்லனை மற்றும் கீழணைக்கு நீர் வந்தடைகிறது

கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியில் 5 அடியை எட்டியதும், வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 737 கன அடி தண்ணீர் திறந்துவிட்டனர்.

வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இன்று நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 46.61 அடியாக உயர்ந்தது. இதனால் ஏரி, கடல் போல் காட்சி அளிக்கிறது. வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் சென்னைக்கு கூடுதலாக குடிநீர் அனுப்பப்படுகிறது. சென்னைக்கு வினாடிக்கு 48 கனஅடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.