ETV Bharat / state

பொள்ளாச்சி அருகே சிறுமியிடம் பேசிய இளைஞர் அடித்துக்கொலை!

author img

By

Published : May 11, 2020, 12:38 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே வீட்டில் 16 வயது சிறுமியுடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

pollachi youth beaten to death
pollachi youth beaten to death

பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மகன் கௌதம். பொள்ளாச்சியில் உள்ள ஒரு துணிக்கடையில் பணியாற்றி வந்தார்.

இவர், கடந்த 7ஆம் தேதியன்று அவரது 16 வயது சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனிமையில் பேசிக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, வீட்டிற்கு அச்சிறுமியின் தந்தை, மாமா, அண்ணன் ஆகிய மூன்று பேரும் வந்துள்ளனர். அவர்கள் கௌதமைக் கண்டவுடன், ஆத்திரத்தில் கட்டை, கிரிக்கெட் பேட் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பாக, பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர் இளைஞர்களைத் தாக்கிய மூன்று பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். இந்நிலையில், இன்று காலை கோவை அரசு மருத்துவமனையில் கௌதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மூன்று பேர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக காவல் துறையினர் மாற்றியுள்ளனர்.

இதையும் படிங்க : அறிகுறியின்றி டெல்லியில் பரவும் கரோனா - கெஜ்ரிவால்

பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மகன் கௌதம். பொள்ளாச்சியில் உள்ள ஒரு துணிக்கடையில் பணியாற்றி வந்தார்.

இவர், கடந்த 7ஆம் தேதியன்று அவரது 16 வயது சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனிமையில் பேசிக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, வீட்டிற்கு அச்சிறுமியின் தந்தை, மாமா, அண்ணன் ஆகிய மூன்று பேரும் வந்துள்ளனர். அவர்கள் கௌதமைக் கண்டவுடன், ஆத்திரத்தில் கட்டை, கிரிக்கெட் பேட் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பாக, பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர் இளைஞர்களைத் தாக்கிய மூன்று பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். இந்நிலையில், இன்று காலை கோவை அரசு மருத்துவமனையில் கௌதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மூன்று பேர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக காவல் துறையினர் மாற்றியுள்ளனர்.

இதையும் படிங்க : அறிகுறியின்றி டெல்லியில் பரவும் கரோனா - கெஜ்ரிவால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.