ETV Bharat / state

கோவை அருகே கஞ்சா விற்ற இளைஞர் கைது

author img

By

Published : Feb 4, 2020, 7:50 AM IST

கோவை: கருமத்தம்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

arrest
arrest

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு புகார் வந்தது. அதன்பேரில், கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

arrest
கைதான சிவகுமார்

அப்போது, சோமனூர் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதிக்கு சென்ற காவல் துறையினர், சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தலில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அதன்பின், காவல் நிலையம் கொண்டுச் சென்று விசாரித்ததில், அவர் சோமனூர் ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பதும் இவர் கஞ்சா வியாபாரி என்பவதும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு புகார் வந்தது. அதன்பேரில், கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

arrest
கைதான சிவகுமார்

அப்போது, சோமனூர் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதிக்கு சென்ற காவல் துறையினர், சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தலில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அதன்பின், காவல் நிலையம் கொண்டுச் சென்று விசாரித்ததில், அவர் சோமனூர் ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பதும் இவர் கஞ்சா வியாபாரி என்பவதும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Intro:கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்Body:கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் சோமனூர் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்து வந்தது இந்நிலையில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் இதனையடுத்து சோமனூர் அருகே உள்ள ரயில்வே பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற கருமத்தம்பட்டி போலீசார் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் சோமனூர் ஊஞ்சப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பதும் மேலும் கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது அதை தொடர்ந்து அவரிடம் இருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை செய்த போலீசார் சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.