ETV Bharat / state

கணவனை கொன்ற மனைவி: காவல் துறை விசாரணை!

author img

By

Published : Sep 29, 2020, 11:07 PM IST

கோவை: கணவனை கொலை செய்துவிட்டு எதிர்பாராதவிதமாக உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவியிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ்
போலீஸ்

கோவை வெரைட்டிஹால் பகுதி திருமால் வீதியைச் சேர்ந்தவர்கள் ப்ராங்க்ளின் பிரிட்டோ (35), கரோலினா (31) தம்பதி. திருமணமாகி கடந்த ஒரு ஆண்டு காலமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்துவந்துள்ளது.

நேற்று (செப். 28) இரவு பிராங்க்ளின் வயிற்றில் கத்திக்குத்துடன் மயங்கிய நிலையில் படுக்கையில் கிடப்பதாக மனைவி கரோலின் அக்கம்பக்கத்தினரிடம் கூறியிருக்கிறார். அக்கம்பக்கத்தினர் பிராங்க்ளினை கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் துறையினர் கரோலினிடம் விசாரணை மேற்கொண்டபோது, "ப்ராங்க்ளின் தனியார் மின்னணு கடையில் வேலை செய்துவந்தார். எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அதேபோல் நேற்று காய்கறி நறுக்கிக் கொண்டிருக்கும்போதும் சண்டை ஏற்பட்டது.

கணவன்-மனைவி
கணவன்-மனைவி

அப்போது, காய்கறி நறுக்கிவிட்டு திரும்பும்போது பின்னால் நின்றுகொண்டிருந்த ப்ராங்க்ளின் மீது எதிர்பாராதவிதமாக கத்தி குத்தியது" என கரோலின் தெரிவித்தார்.

இதில், சந்தேகமடைந்த காவல் துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டதில், பிராங்க்ளின் கரோலினுடைய தாலியை அடகு வைத்ததும் அதைத் திரும்பப் பெற்றுத் தரக்கோரி கரோலின் சண்டை போடும்போது கத்தியால் குத்தி ப்ராங்க்ளின் உயிரிழந்ததும் தெரியவந்தது.

கணவனை கொலை செய்துவிட்டு எதிர்பாராதவிதமாக உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெரைட்டிஹால் பகுதி திருமால் வீதியைச் சேர்ந்தவர்கள் ப்ராங்க்ளின் பிரிட்டோ (35), கரோலினா (31) தம்பதி. திருமணமாகி கடந்த ஒரு ஆண்டு காலமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்துவந்துள்ளது.

நேற்று (செப். 28) இரவு பிராங்க்ளின் வயிற்றில் கத்திக்குத்துடன் மயங்கிய நிலையில் படுக்கையில் கிடப்பதாக மனைவி கரோலின் அக்கம்பக்கத்தினரிடம் கூறியிருக்கிறார். அக்கம்பக்கத்தினர் பிராங்க்ளினை கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் துறையினர் கரோலினிடம் விசாரணை மேற்கொண்டபோது, "ப்ராங்க்ளின் தனியார் மின்னணு கடையில் வேலை செய்துவந்தார். எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அதேபோல் நேற்று காய்கறி நறுக்கிக் கொண்டிருக்கும்போதும் சண்டை ஏற்பட்டது.

கணவன்-மனைவி
கணவன்-மனைவி

அப்போது, காய்கறி நறுக்கிவிட்டு திரும்பும்போது பின்னால் நின்றுகொண்டிருந்த ப்ராங்க்ளின் மீது எதிர்பாராதவிதமாக கத்தி குத்தியது" என கரோலின் தெரிவித்தார்.

இதில், சந்தேகமடைந்த காவல் துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டதில், பிராங்க்ளின் கரோலினுடைய தாலியை அடகு வைத்ததும் அதைத் திரும்பப் பெற்றுத் தரக்கோரி கரோலின் சண்டை போடும்போது கத்தியால் குத்தி ப்ராங்க்ளின் உயிரிழந்ததும் தெரியவந்தது.

கணவனை கொலை செய்துவிட்டு எதிர்பாராதவிதமாக உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.