ETV Bharat / state

அத்தப்பகவுண்டன்புதூரில் குப்பை மேட்டை மரப் பூங்காவாக மாற்றிய கிராம மக்கள்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 9:31 PM IST

6000 Tree Athappagoundenpudur: "மனிதன் பிறப்பிலும் மரம், இறப்பிலும் மரம்" என்ற வசனத்திற்கு ஏற்றவாறு, பிறந்தநாள், திருமண நாள் மற்றும் இறந்தவர்களின் நினைவாகவும், குட்டை, நீரோடை என கிராமம் முழுவதிலும் 6000க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து, மரப் பூங்காவை கிராம மக்கள் உருவாக்கியுள்ளனர்.

6000 க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து  மரப்பூங்காவை கிராம மக்கள்உருவாக்கியுள்ளனர்
அத்தப்பகவுண்டன்புதுர்
அத்தப்பகவுண்டன்புதூரில் குப்பை மேட்டை மரப்பூங்காவாக மாற்றிய கிராம மக்கள்!

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், இருகூர் அருகே அத்தப்பகவுண்டன்புதூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள குட்டைக்கு வரும் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், அப்பகுதி மக்கள் குட்டையைக் குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் குட்டையானதுக் குப்பை மேடாக மாற்றியுள்ளது.

நாளடைவில், கிராம மக்களால் உருவான குப்பை மேடானது, கிராம மக்களுக்கே இடையூறாக இருந்ததினால், அவற்றை அகற்ற வேண்டும் என அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் பலர் இணைந்து, பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன், குட்டையில் இருந்த குப்பைகளை வெளியேற்றியுள்ளனர்.

மரப்பூங்கா: பின்னர், குட்டையை மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் மாற்ற வேண்டும் என முடிவெடுத்த தன்னார்வலர்கள், கிராம மக்களின் உதவியுடன், மரப் பூங்காவை உருவாக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, அப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிழல் தரும் மரங்கள், மூலிகை மரங்கள், பழ மரங்கள் உள்ளிட்டவற்றை நடவு செய்து பராமரித்தும் வந்துள்ளனர். இதனால் அப்பகுதி பல்லுயிர் சூழல் மேம்பட்டதோடு, பசுமையான சூழலாகவும் உருவாகியுள்ளது.

பசுமை வனம்: கிராம மக்களின், மரப்பூங்கா உருவாக்கும் முயற்சி வெற்றி அடைந்ததால், மேலும் மூன்று மரப் பூங்காக்களை உருவாக்க நொய்யல் கிளை ஓடை மற்றும் மயான பகுதிகளில் மொத்தம் 6 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். மேலும், மரம் வளர்ப்பதில் கிராம மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிறந்தநாள் மற்றும் இறந்த நாள் நினைவாக மரம் நடுதல் என்ற புதிய முயற்சியைத் தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அப்பகுதியில் அதிக அளவிலான மரங்கள் நடவு செய்யப்பட்டு கிராம மக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் குப்பை மேடானது பசுமை நிறைந்த வனமாகக் காட்சியளிக்கிறது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலரும், இயற்கை விவசாயியுமான தங்கவேலு ஈடிவிற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறியதாவது, "நீர் வழிப்பாதை இல்லாத குட்டையானதுக் குப்பை மேடாக இருந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு சமூக ஆர்வலர்கள் இணைந்து, குட்டையில் உள்ள குப்பைகளை வெளியேற்றி, மரங்களை நடவு செய்ய முடிவு செய்தோம். அதன்படி, அப்பகுதியில் பல வகையான மரங்களை நடவு செய்து வனத்தை உருவாக்கினோம்.

மரங்களுக்கான நீர் தேவையைப் பூர்த்தி செய்ய, இருகூர் பேரூராட்சி உதவியுடன் ஆழ்துளைக் கிணறு அமைத்துச் சொட்டு நீர்ப் பாசனம் செய்யப்பட்டது. மேலும், ஓடை மற்றும் மயான பகுதிகளிலும் மரங்களை நட்டு மரப் பூங்காக்களை உருவாக்கியுள்ளோம். இந்த கிராமத்தில் மொத்தம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு அவற்றைக் கிராம மக்கள் பராமரித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள மரங்களால் சுத்தமான காற்று கிடைப்பதுடன், வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. பறவைகள் கூடு கட்டி வாழ உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. பறவைகளின் உணவு தேவைக்குப் பழ மரங்கள் நடப்பட்டதால், பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. மனிதன் பிறந்தாலும் மரம், இறந்தாலும் மரம் என மரங்களை நட்டு வருகிறோம்” என்று கூறினார்.

இதுகுறித்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் துரைசாமி கூறியதாவது, “எனது தந்தையின் நினைவாக முதல் முறையாக மரம் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பலரும், குழந்தைகள் பிறந்தநாள், திருமண நாள் மற்றும் இறந்தவர்களின் நினைவாக மரம் வைத்து வருகின்றனர். ஒவ்வொரு தருணங்களிலும் அம்மரங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து வரும் கிராம மக்கள் அம்மரங்களை குடும்பங்களில் ஒருவராக, குழந்தையைப் போன்று பாதுகாத்து வருகின்றனர்.

இறந்தவர்களின் நினைவாக வைக்கப்பட்ட மரங்களின் வளர்ச்சியைக் கண்டு, இறந்தவர்கள் தங்களோடு வாழ்ந்து வருவதாக நம்புகிறோம். ஆண்டுதோறும் அவர்களின் நினைவு நாளில் மரத்திற்கு மரியாதை செலுத்தி வருகிறோம். இது மட்டுமின்றி மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக, மரங்கள் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முக்கிய தலைவர்களின் நினைவாகவும் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

குட்டை, நீரோடை , பள்ளி வளாகங்கள், நூலகம் என அனைத்து பகுதிகளிலும் மரத்தை நட்டு, ஒரு கிராமம் பராமரித்து வருவது, அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே மரம் வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை பழுதுபார்க்க இலவச சிறப்பு முகாம்.. உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அத்தப்பகவுண்டன்புதூரில் குப்பை மேட்டை மரப்பூங்காவாக மாற்றிய கிராம மக்கள்!

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், இருகூர் அருகே அத்தப்பகவுண்டன்புதூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள குட்டைக்கு வரும் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், அப்பகுதி மக்கள் குட்டையைக் குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் குட்டையானதுக் குப்பை மேடாக மாற்றியுள்ளது.

நாளடைவில், கிராம மக்களால் உருவான குப்பை மேடானது, கிராம மக்களுக்கே இடையூறாக இருந்ததினால், அவற்றை அகற்ற வேண்டும் என அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் பலர் இணைந்து, பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன், குட்டையில் இருந்த குப்பைகளை வெளியேற்றியுள்ளனர்.

மரப்பூங்கா: பின்னர், குட்டையை மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் மாற்ற வேண்டும் என முடிவெடுத்த தன்னார்வலர்கள், கிராம மக்களின் உதவியுடன், மரப் பூங்காவை உருவாக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, அப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிழல் தரும் மரங்கள், மூலிகை மரங்கள், பழ மரங்கள் உள்ளிட்டவற்றை நடவு செய்து பராமரித்தும் வந்துள்ளனர். இதனால் அப்பகுதி பல்லுயிர் சூழல் மேம்பட்டதோடு, பசுமையான சூழலாகவும் உருவாகியுள்ளது.

பசுமை வனம்: கிராம மக்களின், மரப்பூங்கா உருவாக்கும் முயற்சி வெற்றி அடைந்ததால், மேலும் மூன்று மரப் பூங்காக்களை உருவாக்க நொய்யல் கிளை ஓடை மற்றும் மயான பகுதிகளில் மொத்தம் 6 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். மேலும், மரம் வளர்ப்பதில் கிராம மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிறந்தநாள் மற்றும் இறந்த நாள் நினைவாக மரம் நடுதல் என்ற புதிய முயற்சியைத் தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அப்பகுதியில் அதிக அளவிலான மரங்கள் நடவு செய்யப்பட்டு கிராம மக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் குப்பை மேடானது பசுமை நிறைந்த வனமாகக் காட்சியளிக்கிறது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலரும், இயற்கை விவசாயியுமான தங்கவேலு ஈடிவிற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறியதாவது, "நீர் வழிப்பாதை இல்லாத குட்டையானதுக் குப்பை மேடாக இருந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு சமூக ஆர்வலர்கள் இணைந்து, குட்டையில் உள்ள குப்பைகளை வெளியேற்றி, மரங்களை நடவு செய்ய முடிவு செய்தோம். அதன்படி, அப்பகுதியில் பல வகையான மரங்களை நடவு செய்து வனத்தை உருவாக்கினோம்.

மரங்களுக்கான நீர் தேவையைப் பூர்த்தி செய்ய, இருகூர் பேரூராட்சி உதவியுடன் ஆழ்துளைக் கிணறு அமைத்துச் சொட்டு நீர்ப் பாசனம் செய்யப்பட்டது. மேலும், ஓடை மற்றும் மயான பகுதிகளிலும் மரங்களை நட்டு மரப் பூங்காக்களை உருவாக்கியுள்ளோம். இந்த கிராமத்தில் மொத்தம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு அவற்றைக் கிராம மக்கள் பராமரித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள மரங்களால் சுத்தமான காற்று கிடைப்பதுடன், வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. பறவைகள் கூடு கட்டி வாழ உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. பறவைகளின் உணவு தேவைக்குப் பழ மரங்கள் நடப்பட்டதால், பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. மனிதன் பிறந்தாலும் மரம், இறந்தாலும் மரம் என மரங்களை நட்டு வருகிறோம்” என்று கூறினார்.

இதுகுறித்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் துரைசாமி கூறியதாவது, “எனது தந்தையின் நினைவாக முதல் முறையாக மரம் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பலரும், குழந்தைகள் பிறந்தநாள், திருமண நாள் மற்றும் இறந்தவர்களின் நினைவாக மரம் வைத்து வருகின்றனர். ஒவ்வொரு தருணங்களிலும் அம்மரங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து வரும் கிராம மக்கள் அம்மரங்களை குடும்பங்களில் ஒருவராக, குழந்தையைப் போன்று பாதுகாத்து வருகின்றனர்.

இறந்தவர்களின் நினைவாக வைக்கப்பட்ட மரங்களின் வளர்ச்சியைக் கண்டு, இறந்தவர்கள் தங்களோடு வாழ்ந்து வருவதாக நம்புகிறோம். ஆண்டுதோறும் அவர்களின் நினைவு நாளில் மரத்திற்கு மரியாதை செலுத்தி வருகிறோம். இது மட்டுமின்றி மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக, மரங்கள் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முக்கிய தலைவர்களின் நினைவாகவும் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

குட்டை, நீரோடை , பள்ளி வளாகங்கள், நூலகம் என அனைத்து பகுதிகளிலும் மரத்தை நட்டு, ஒரு கிராமம் பராமரித்து வருவது, அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே மரம் வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை பழுதுபார்க்க இலவச சிறப்பு முகாம்.. உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.