கோவை மாவட்டம், இருகூர் தீபம் நகர் பகுதியில் நேற்று (ஜூலை 23) அதிகாலை 3.30 மணியளவில், அரை நிர்வாணத்தில் கையில் சில ஆயுதங்களுடன் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று உலா வந்ததுள்ளது. இந்தக் காட்சிகள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இக்காட்சிகள் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரை நிர்வாணத்தில் உலா வந்த அந்த மர்ம நபர்கள் யார் என்பதும், அதிகாலை நேரத்தில் கையில் ஆயுதங்களுடன் எதற்காக வீடுகளை நோட்டமிட்டவாறு சென்றார்கள் என்பது குறித்தும், சிங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, கோவை சிங்காநல்லூர் பகுதியில், இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அப்பகுதியில் இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்றுள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து, அந்தக் கும்பலில் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இவர்களும் சந்தமரம் வெட்டும் கும்பலா என்ற கோணத்திலும் விசாரணையைக் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: "இந்து மதத்தை இழிவுப்படுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்" ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர்