ETV Bharat / state

கோவையில் முதல் ஆளாக மது வாங்கி சென்ற ஸ்பெயின் நாட்டவர்!

author img

By

Published : May 7, 2020, 1:03 PM IST

கோவை: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் முதலாவதாக மது வாங்கி சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டாஸ்மாக் கடைகள் திறப்பு: முதல் ஆளாக வந்த ஸ்பெயின் நாட்டவர்!
டாஸ்மாக் கடைகள் திறப்பு: முதல் ஆளாக வந்த ஸ்பெயின் நாட்டவர்!

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால், கடந்த 40 நாள்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இச்சூழலில் இன்று சென்னையைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. இந்த மது விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை வருவாய் மற்றும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 88 டாஸ்மாக் கடைகள் தவிர்த்து, மற்ற பகுதிகளிலுள்ள 207 கடைகள் இன்று திறக்கப்பட்டன. காலை 9 மணி முதலே மதுக்கடைகளின் முன்பாக ஏராளமானோர் குவிந்தனர். கடைகள் திறந்த பின் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.

டாஸ்மாக் கடைகள் திறப்பு: முதல் ஆளாக வந்த ஸ்பெயின் நாட்டவர்!

அந்த வகையில் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள மதுக்கடையில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கோர்சே, பெர்பைன் ஆகிய இருவர் வரிசையில் நின்று, முதலாவதாக மதுபானங்களை வாங்கி சென்றனர்.

இதையும் படிங்க...விசாகப்பட்டினம் வாயு கசிவு: தகவல்கள் உடனுக்குடன்

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால், கடந்த 40 நாள்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இச்சூழலில் இன்று சென்னையைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. இந்த மது விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை வருவாய் மற்றும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 88 டாஸ்மாக் கடைகள் தவிர்த்து, மற்ற பகுதிகளிலுள்ள 207 கடைகள் இன்று திறக்கப்பட்டன. காலை 9 மணி முதலே மதுக்கடைகளின் முன்பாக ஏராளமானோர் குவிந்தனர். கடைகள் திறந்த பின் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.

டாஸ்மாக் கடைகள் திறப்பு: முதல் ஆளாக வந்த ஸ்பெயின் நாட்டவர்!

அந்த வகையில் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள மதுக்கடையில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கோர்சே, பெர்பைன் ஆகிய இருவர் வரிசையில் நின்று, முதலாவதாக மதுபானங்களை வாங்கி சென்றனர்.

இதையும் படிங்க...விசாகப்பட்டினம் வாயு கசிவு: தகவல்கள் உடனுக்குடன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.