ETV Bharat / state

தொழில் முனைவோர் நேச கரம் நீட்ட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

author img

By

Published : Jan 23, 2021, 1:04 PM IST

கோயம்புத்தூர்: அதிமுக ஆட்சியில் இருக்கும் நன்மைகள் தொடர எங்களுக்கு தொழில் முனைவோர் நேச கரம் நீட்ட வேண்டும் என கோயம்புத்தூர் தொழில் முனைவோருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

Industry
Industry

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூரில் இரண்டு நாட்கள் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக நேற்று (ஜனவரி 22) விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த அவர் தனியார் கல்லூரி வளகாத்தில் உள்ள அரங்கில் அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் மனுக்கள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

பின்னர் தொழில் முனைவோர் மத்தியில் பேசிய முதலமைச்சர், தொழில்துறையினர் முன் வைத்துள்ள கோரிக்கைகளில் எங்களால் என்னென்ன முடியுமோ அத்தனையும் செய்து கொடுக்கப்படும். தொழிலும் வேளாண்மையும் ஒரு நாட்டிற்கு இரு கண்கள். இதில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகின்றது. டெல்டா பகுதியில் வழக்கமாக 23 லட்சம் மெட்ரிக் உற்பத்தி இருக்கும், இந்த ஆண்டு 32 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தியாகி இருக்கின்றது.

கரோனா காலத்திலும் ரூ. 60 ஆயிரம் கோடி தொழில் முதலீடு வந்துள்ளது. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இல்லாவிட்டால் தொழில் சிறப்பாக இருக்காது. சட்டம் ஒழுங்கை இந்த அரசு கவனமாக பார்த்து கொள்கின்றது. தடையில்லா மின்சாரத்தை இந்த அரசு வழங்குவதுடன், மின் மிகை மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது.

கோயம்புத்தூர் மாநகரின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அமைச்சர் வேலுமணி நடவடிக்கை எடுத்து வருவதுடன் முன் மாதிரி அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார். தொழில் முனைவோர் அச்சப்பட வேண்டியது இல்லை. அவர்களின் அணைத்து கோரிக்கைகளும் நிறைவேறும். விரைவில் தேர்தல் வர இருக்கின்றது, இந்த ஆட்சியில் இருக்கும் நன்மைகள் தொடர, எங்களுக்கு நேசகரம் நீட்ட வேண்டும் ”என்று கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூரில் இரண்டு நாட்கள் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக நேற்று (ஜனவரி 22) விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த அவர் தனியார் கல்லூரி வளகாத்தில் உள்ள அரங்கில் அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் மனுக்கள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

பின்னர் தொழில் முனைவோர் மத்தியில் பேசிய முதலமைச்சர், தொழில்துறையினர் முன் வைத்துள்ள கோரிக்கைகளில் எங்களால் என்னென்ன முடியுமோ அத்தனையும் செய்து கொடுக்கப்படும். தொழிலும் வேளாண்மையும் ஒரு நாட்டிற்கு இரு கண்கள். இதில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகின்றது. டெல்டா பகுதியில் வழக்கமாக 23 லட்சம் மெட்ரிக் உற்பத்தி இருக்கும், இந்த ஆண்டு 32 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தியாகி இருக்கின்றது.

கரோனா காலத்திலும் ரூ. 60 ஆயிரம் கோடி தொழில் முதலீடு வந்துள்ளது. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இல்லாவிட்டால் தொழில் சிறப்பாக இருக்காது. சட்டம் ஒழுங்கை இந்த அரசு கவனமாக பார்த்து கொள்கின்றது. தடையில்லா மின்சாரத்தை இந்த அரசு வழங்குவதுடன், மின் மிகை மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது.

கோயம்புத்தூர் மாநகரின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அமைச்சர் வேலுமணி நடவடிக்கை எடுத்து வருவதுடன் முன் மாதிரி அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார். தொழில் முனைவோர் அச்சப்பட வேண்டியது இல்லை. அவர்களின் அணைத்து கோரிக்கைகளும் நிறைவேறும். விரைவில் தேர்தல் வர இருக்கின்றது, இந்த ஆட்சியில் இருக்கும் நன்மைகள் தொடர, எங்களுக்கு நேசகரம் நீட்ட வேண்டும் ”என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.