ETV Bharat / state

'நாற்பதும் நாங்களே' - சி.பி ராதாகிருஷ்ணன் ஆரூடம்! - bjp

கோவை: "நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்" என்று, கோவை பாஜக வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சி.பி ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Mar 25, 2019, 7:35 PM IST

கோவை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.


சி.பி ராதாகிருஷ்ணன் பேட்டி

அப்போது அவர் கூறியதாவது,

"ஜனநாயகத்தில் மிகப்பெரிய பலமே தேர்தல்கள் உரிய நேரத்தில் உரிய முறையில் நடத்தப்படுவதுதான். கடந்த காலங்களில் சின்ன சின்ன தவறுகள் நடந்து இருந்தாலும் தேர்தல் கமிஷனால் ஒன்றன் பின் ஒன்றாக அவைகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கியுள்ளது. மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் விலைவாசி உயர்வு இல்லாத காலமாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் உலக வங்கியில் கடன் வாங்காத பிரதமர் என்ற பெயரை மோடி பெற்றுள்ளார்.

கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு, கழிவறை, மின்னிணைப்பு தரப்பட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும். முதலமைச்சர், துணை முதலமைச்சர், பாரதப் பிரதமர் உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரைக்காக கோவைக்கு வர உள்ளனர். எங்களின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகவே நாங்கள் கருதுகிறோம்" என்றார்.

கோவை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.


சி.பி ராதாகிருஷ்ணன் பேட்டி

அப்போது அவர் கூறியதாவது,

"ஜனநாயகத்தில் மிகப்பெரிய பலமே தேர்தல்கள் உரிய நேரத்தில் உரிய முறையில் நடத்தப்படுவதுதான். கடந்த காலங்களில் சின்ன சின்ன தவறுகள் நடந்து இருந்தாலும் தேர்தல் கமிஷனால் ஒன்றன் பின் ஒன்றாக அவைகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கியுள்ளது. மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் விலைவாசி உயர்வு இல்லாத காலமாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் உலக வங்கியில் கடன் வாங்காத பிரதமர் என்ற பெயரை மோடி பெற்றுள்ளார்.

கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு, கழிவறை, மின்னிணைப்பு தரப்பட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும். முதலமைச்சர், துணை முதலமைச்சர், பாரதப் பிரதமர் உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரைக்காக கோவைக்கு வர உள்ளனர். எங்களின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகவே நாங்கள் கருதுகிறோம்" என்றார்.

Intro:கோவை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி


Body:ஜனநாயகத்தில் மிகப்பெரிய பலமே தேர்தல்கள் உரிய நேரத்தில் உரிய முறையில் நடத்தப்படுவதுதான் எனவும் கடந்த காலங்களில் சின்ன சின்ன தவறுகள் நடந்து இருந்தாலும் தேர்தல் கமிஷனால் ஒன்றன் பின் ஒன்றாக அவைகள் அகற்றப்பட்டு வருகிறது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கி உள்ளதாகவும் நிலையான ஆட்சி மத்தியில் இல்லையென்றால் தேசத்தின் முன்னேற்றம் தடைபட்டு விடும் என கூறிய அவர் ஒரு கருத்து மிக்க சிந்தனைதான் அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்பைப் பெற்றுத் தரும் மோடியின் 5 ஆண்டு காலத்தில் விலைவாசி உயர்வு இல்லாத காலமாக உள்ளது என சுட்டிக்காட்டியவர் உலகத்தைக் கண்டு இந்தியா பயப்படாமல் இந்தியா என்ற கருத்து முன் வைக்கிறது என்று உலக நாடுகள் பார்க்கும் அளவிற்கு மோடி தேசத்தை உயர்த்தி உள்ளார் எனவும் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் உலக வங்கியில் கடன் வாங்காத பாரதப் பிரதமர் மோடி என்ற பெயர் பெற்றுள்ளதாகவும் கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு கழிவறை மின்னிணைப்பு தரப்பட்டு உள்ளதாகவும் 2024-ம் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும் என கூறியவர் இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் தென்னிந்திய நதி இணைப்பு மத்திய அரசிடம் எடுத்து வைத்துள்ளனர் மோடி ஆட்சி வரும்போது கோதாவரி காவிரி உடன் இணைக்கப்பட்டு தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை முழுமையாக தீரும் எனவும் 40 இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும் என தெரிவித்த அவர் கோவையில் போக்குவரத்து நெருக்கடி நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் எனவும் அவிநாசி சாலையில் அமைக்கப்பட உள்ள மேம்பாலம் நிலம்பூர் வரை நீடிக்கப்படும் மேட்டுப்பாளையம் சாலை அகலப்படுத்தும் அதோடு தேவைப்படும் இடங்களில் மேம்பாலம் அமைக்கப்படும் ரயில் வசதியை பெருக்குவோம் தென் தமிழகத்தில் அதிக ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தும் எனவும் மோடி வந்த பிறகு அதிக மின் பாதை உருவாகியுள்ளதாகவும் முதல்வர் துணை முதல்வர் பாரதப் பிரதமர் உள்ளிட்டோர் பிரச்சாரத்திற்காக கோவைக்கு வருவார்கள் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கோவை பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வார் வாசன் அன்புமணி ராமதாஸ் கூட்டணி கட்சித் தலைவர் எல்லோரும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவார்கள் எனவும் பாஜக அதிமுக அவரவர் கொள்கையை வைத்துள்ளார்கள் இன்னும் இயக்கங்கள் ஒன்றிணைய வில்லை என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள இட ஒதுக்கீடு மற்றும் பொது சிவில் சட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.