ETV Bharat / state

அம்பு போல் வானை கிழித்து சாகசம் நிகழ்த்திய தேஜஸ் - போர் விமானம்

தேஜஸ் போர் விமானம் தயாரித்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்குப் பெருமை சேர்க்கும்வகையில் கோயம்புத்தூர் சூலூர் விமானப்படை தளத்தில் நேற்று ஒரே நாளில் 14 தேஜஸ் ரக விமானங்கள் அம்பு போல் பறந்து சாகசம் நிகழ்த்தின.

Tejas air craft  Tejas  Tejas air craft fly like an arrow  air craft  coimbatore news  coimbatore latest news  கோயம்புத்தூர் செய்திகள்  தேஜஸ் போர் விமானம்  அம்பு போல் சென்ற தேஜஸ் போர் விமானம்  போர் விமானம்  விமானம்
தேஜஸ்
author img

By

Published : Oct 17, 2021, 7:48 AM IST

கோயம்புத்தூர்: இந்தியாவின் சொந்தத் தயாரிப்பு தேஜஸ் சூப்பர்சோனிக் விமானம். இந்த ஆயுதம் தாங்கிய விமானம் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.

சோவியத் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட மிக் 21 ரக விமானங்களை மாற்ற வேண்டும், உள்நாட்டிலேயே விமானங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற திட்டத்தின்கீழ் 1983ஆம் ஆண்டு 560 கோடி ரூபாய் செலவில் போர் விமானத்தை உருவாக்கும் திட்டம் தொடங்கியது.

பின்னர் பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட திட்டம், அமெரிக்காவின் தடை உள்ளிட்ட காரணங்களால் பயன்பாட்டுக்கு வருவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

விமானப் படையில் சேர்த்தல்

இறுதியில் 2001ஆம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சியின்போது வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் இந்திய விமானப்படை 40 தேஜஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்தது. இருப்பினும் நவீனப்படுத்துதல் மற்றும் குறைகளைச் சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளால் உற்பத்தியில் தாமதமாகி 2016ஆம் ஆண்டில்தான் விமானப் படையில் சேர்க்கப்பட்டது.

இந்த விமானமானது நான்காம் தலைமுறையைச் சேர்ந்ததாகும். ஒற்றை இருக்கைக் கொண்ட அதிநவீன தேஜஸ் விமானம் 13 டன் எடை கொண்டது. 3 டன் எடையுள்ள ஆயுதங்களை எடுத்துச்செல்லும் திறன்கொண்டது. மணிக்கு 1,350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன்கொண்டது.

இந்த விமானத்தில் எந்திரத் துப்பாக்கிகளும் - எட்டு ஏவுகணை தாங்கிகளும் உள்ளன. வானில் இருந்து வான் இலக்குகளையும், தரையிலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டவை. பிரமோஸ், அஸ்த்ரா, லேசர் வெடிகுண்டுகள், கொத்து வெடிகுண்டுகள் போன்ற குண்டுகளையும் வீசும் சக்தியைக் கொண்டது.

அம்பு போல் சாகசம் நிகழ்த்திய தேஜஸ்

அம்பு போல் வானைகிழித்து சாகசம்

வானில் எதிரி நாட்டு விமானங்கள், ஏவுகணைகளைக் கண்டறிந்து தாக்கும் திறன்கொண்ட முன்னேறிய மின்னணு முறையில் ஸ்கேன் செய்யும் ரேடார் வசதியை கொண்டிருக்கிறது.

இந்த விமானத்தைத் தயாரித்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்குப் பெருமை சேர்க்கும்வகையில் கோயம்புத்தூர் சூலூர் விமானப்படை தளத்தில் நேற்று ஒரே நாளில் 14 தேஜஸ் ரக விமானங்கள் அம்பு போல் பறந்து சாகசம் நிகழ்த்தின.

இதனை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் கண்டு வியந்தனர். இந்திய அளவில் கோயம்புத்தூர் சூலூர் விமானப் படைத்தளத்தில்தான் தேஜஸ் ரக விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: IPL 2021: 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டார் தோனி

கோயம்புத்தூர்: இந்தியாவின் சொந்தத் தயாரிப்பு தேஜஸ் சூப்பர்சோனிக் விமானம். இந்த ஆயுதம் தாங்கிய விமானம் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.

சோவியத் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட மிக் 21 ரக விமானங்களை மாற்ற வேண்டும், உள்நாட்டிலேயே விமானங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற திட்டத்தின்கீழ் 1983ஆம் ஆண்டு 560 கோடி ரூபாய் செலவில் போர் விமானத்தை உருவாக்கும் திட்டம் தொடங்கியது.

பின்னர் பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட திட்டம், அமெரிக்காவின் தடை உள்ளிட்ட காரணங்களால் பயன்பாட்டுக்கு வருவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

விமானப் படையில் சேர்த்தல்

இறுதியில் 2001ஆம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சியின்போது வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் இந்திய விமானப்படை 40 தேஜஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்தது. இருப்பினும் நவீனப்படுத்துதல் மற்றும் குறைகளைச் சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளால் உற்பத்தியில் தாமதமாகி 2016ஆம் ஆண்டில்தான் விமானப் படையில் சேர்க்கப்பட்டது.

இந்த விமானமானது நான்காம் தலைமுறையைச் சேர்ந்ததாகும். ஒற்றை இருக்கைக் கொண்ட அதிநவீன தேஜஸ் விமானம் 13 டன் எடை கொண்டது. 3 டன் எடையுள்ள ஆயுதங்களை எடுத்துச்செல்லும் திறன்கொண்டது. மணிக்கு 1,350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன்கொண்டது.

இந்த விமானத்தில் எந்திரத் துப்பாக்கிகளும் - எட்டு ஏவுகணை தாங்கிகளும் உள்ளன. வானில் இருந்து வான் இலக்குகளையும், தரையிலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டவை. பிரமோஸ், அஸ்த்ரா, லேசர் வெடிகுண்டுகள், கொத்து வெடிகுண்டுகள் போன்ற குண்டுகளையும் வீசும் சக்தியைக் கொண்டது.

அம்பு போல் சாகசம் நிகழ்த்திய தேஜஸ்

அம்பு போல் வானைகிழித்து சாகசம்

வானில் எதிரி நாட்டு விமானங்கள், ஏவுகணைகளைக் கண்டறிந்து தாக்கும் திறன்கொண்ட முன்னேறிய மின்னணு முறையில் ஸ்கேன் செய்யும் ரேடார் வசதியை கொண்டிருக்கிறது.

இந்த விமானத்தைத் தயாரித்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்குப் பெருமை சேர்க்கும்வகையில் கோயம்புத்தூர் சூலூர் விமானப்படை தளத்தில் நேற்று ஒரே நாளில் 14 தேஜஸ் ரக விமானங்கள் அம்பு போல் பறந்து சாகசம் நிகழ்த்தின.

இதனை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் கண்டு வியந்தனர். இந்திய அளவில் கோயம்புத்தூர் சூலூர் விமானப் படைத்தளத்தில்தான் தேஜஸ் ரக விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: IPL 2021: 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டார் தோனி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.