ETV Bharat / state

நாராயணசாமி ஆட்சியில் நல்ல கல்வி இல்லை: தமிழிசை செளந்தரராஜன்

author img

By

Published : Dec 21, 2022, 10:40 PM IST

நாராயணசாமி ஆட்சியில் நல்ல கல்வியைக் கொண்டு வர இயலவில்லை என தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாராயணசாமி ஆட்சியில் நல்ல கல்வி இல்லை: தமிழிசை செளந்தரராஜன்
நாராயணசாமி ஆட்சியில் நல்ல கல்வி இல்லை: தமிழிசை செளந்தரராஜன்

கோயம்புத்தூர்: நல்லாம்பாளையத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குழந்தைகளை உலக அரங்கிற்குக் கொண்டு செல்ல பாரத பிரதமர் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளார். அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும். அதற்கு நாம் பாடுபடுவோம். சிபிஎஸ்சி பாடத்திட்டம் குழந்தைகளுக்கு சாதகமாகத்தான் இருக்கும்.

புதுச்சேரியை பொருத்தமட்டில் தமிழ் வழி பாட கல்வி, மலையாள பாட கல்வி, தெலுங்கு வழி பாட கல்வி என மூன்று விதமாக பாடக் கல்வி உள்ளது. ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் சிபிஎஸ்சி கல்வித் திட்டம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தமிழ் படிப்பதைத் தமிழிசை தடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார், அதை நான் வன்மையாக மறுக்கிறேன்.

நாராயணசாமியின் கருத்தை உறுதியாக மறுக்கிறேன். சமமான கல்விக்கு இந்த முடிவை எடுத்துள்ளோம். சிபிஎஸ்இ பற்றி அரசியல்வாதிகள் ஏதும் சொல்ல வேண்டாம். மூளை ஏற்றுக் கொண்டாலும் குழந்தைகளை நாம் மற்ற மொழியைப் படிக்க விடுவதில்லை. நாராயணசாமியின் அக்கரையை விட எங்களுக்கு அதிக அக்கறை உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி கல்வி வேண்டும். அதற்காக ஒட்டுமொத்தமாக சிபிஎஸ்சி கொண்டு வந்துள்ளோம்.

பீஸ் கட்டவில்லை என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வரும்படி எந்த ஆசிரியரும் நடந்து கொள்ளக் கூடாது. நாராயணசாமி ஆட்சியில் நல்ல கல்வியைக் கொண்டு வர முடியவில்லை. ஆகவே அவரது குற்றச்சாட்டை நான் புறம் தள்ளுகிறேன். சமீபமாக அண்ணாமலையின் வாட்ச் அரசியல் பேச்சு குறித்த கேள்விக்கு, எல்லாத்தையும் நான் வாட்ச் பண்றேன் என நகைச்சுவையாகப் பதிலளித்தார்.

இதையும் படிங்க: எங்கு பொறி வைத்தால், எந்த எலி வரும் என்று எங்களுக்குத் தெரியும்: அண்ணாமலை

கோயம்புத்தூர்: நல்லாம்பாளையத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குழந்தைகளை உலக அரங்கிற்குக் கொண்டு செல்ல பாரத பிரதமர் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளார். அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும். அதற்கு நாம் பாடுபடுவோம். சிபிஎஸ்சி பாடத்திட்டம் குழந்தைகளுக்கு சாதகமாகத்தான் இருக்கும்.

புதுச்சேரியை பொருத்தமட்டில் தமிழ் வழி பாட கல்வி, மலையாள பாட கல்வி, தெலுங்கு வழி பாட கல்வி என மூன்று விதமாக பாடக் கல்வி உள்ளது. ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் சிபிஎஸ்சி கல்வித் திட்டம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தமிழ் படிப்பதைத் தமிழிசை தடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார், அதை நான் வன்மையாக மறுக்கிறேன்.

நாராயணசாமியின் கருத்தை உறுதியாக மறுக்கிறேன். சமமான கல்விக்கு இந்த முடிவை எடுத்துள்ளோம். சிபிஎஸ்இ பற்றி அரசியல்வாதிகள் ஏதும் சொல்ல வேண்டாம். மூளை ஏற்றுக் கொண்டாலும் குழந்தைகளை நாம் மற்ற மொழியைப் படிக்க விடுவதில்லை. நாராயணசாமியின் அக்கரையை விட எங்களுக்கு அதிக அக்கறை உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி கல்வி வேண்டும். அதற்காக ஒட்டுமொத்தமாக சிபிஎஸ்சி கொண்டு வந்துள்ளோம்.

பீஸ் கட்டவில்லை என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வரும்படி எந்த ஆசிரியரும் நடந்து கொள்ளக் கூடாது. நாராயணசாமி ஆட்சியில் நல்ல கல்வியைக் கொண்டு வர முடியவில்லை. ஆகவே அவரது குற்றச்சாட்டை நான் புறம் தள்ளுகிறேன். சமீபமாக அண்ணாமலையின் வாட்ச் அரசியல் பேச்சு குறித்த கேள்விக்கு, எல்லாத்தையும் நான் வாட்ச் பண்றேன் என நகைச்சுவையாகப் பதிலளித்தார்.

இதையும் படிங்க: எங்கு பொறி வைத்தால், எந்த எலி வரும் என்று எங்களுக்குத் தெரியும்: அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.