ETV Bharat / state

சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை - சோகத்தில் மாணவர்கள் - School students are sad because they have not seen the eclipse

கோயம்புத்தூர்: சூரிய கிரகணத்தை மேகமூட்டத்தால் காண முடியவில்லை என்று பள்ளி மாணவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.

school students
school students
author img

By

Published : Dec 26, 2019, 4:37 PM IST

வானில் தோன்றும் அரிய நிகழ்வுகளில் ஒன்றானது சூரியகிரகணம். இன்று இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தென்பட்டது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, உதகை உள்ளிட்ட பகுதிகளில் சூரிய கிரகணம் தெளிவாக தெரியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், கோவை மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் சூரியகிரகணம் தெரியவில்லை.

சூரிய கிரகணத்தை காண வந்த மாணவர்கள்
சூரிய கிரகணத்தை காண வந்த மாணவர்கள்

மதுக்கரை பகுதியில் மட்டும் சில நொடிகள் கிரகணத்தை பார்க்க முடிந்தது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சூரிய கிரகணத்தை பார்க்க இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை முதல் மேக மூட்டம் அதிகமாக இருந்ததால் சூரிய கிரகணத்தை காண வந்த பொதுமக்களும், மாணவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், அரிய நிகழ்வான சூரிய கிரகணத்தை பார்க்க ஆர்வத்துடன் வந்தோம். மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் கிரகணத்தை பார்க்க முடியவில்லை. மேகமூட்டத்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அடுத்த சூரிய கிரகணத்தை காண 12 ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும் என மாணவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.

ஏமாற்றம் அடைந்த மாணவர்கள்

இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி வெங்கடேசன் கூறுகையில், "இன்றைக்கு வானில் ஒரு அற்புதமான காட்சியை பார்த்திருக்கிறோம். வளைய சூரிய கிரகணம் எப்படி உருவாகிறது என்பதை நேரடியாக பார்த்துள்ளோம். தமிழ்நாட்டில் சில பகுதிகளில் குறிப்பாக ஊட்டி, கரூர் போன்ற பகுதிகளில் கிரகணம் தெரிந்தது. கோவையில் சில வினாடிகள் மட்டுமே கிரகணம் தெரிந்ததாக கூறப்படுகிறது.

அழகாக வானில் சூரியனை சுற்றியிருக்கும் நெருப்பு வளையம் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என மக்கள் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது. அறிவியல் குறித்து ஒரு நம்பிக்கையும், அறிவியலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் இந்த கிரகணம் ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: திருச்சியில் 3 நாட்களுக்கு மாபெரும் கலைகொண்டாட்டம்!

வானில் தோன்றும் அரிய நிகழ்வுகளில் ஒன்றானது சூரியகிரகணம். இன்று இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தென்பட்டது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, உதகை உள்ளிட்ட பகுதிகளில் சூரிய கிரகணம் தெளிவாக தெரியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், கோவை மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் சூரியகிரகணம் தெரியவில்லை.

சூரிய கிரகணத்தை காண வந்த மாணவர்கள்
சூரிய கிரகணத்தை காண வந்த மாணவர்கள்

மதுக்கரை பகுதியில் மட்டும் சில நொடிகள் கிரகணத்தை பார்க்க முடிந்தது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சூரிய கிரகணத்தை பார்க்க இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை முதல் மேக மூட்டம் அதிகமாக இருந்ததால் சூரிய கிரகணத்தை காண வந்த பொதுமக்களும், மாணவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், அரிய நிகழ்வான சூரிய கிரகணத்தை பார்க்க ஆர்வத்துடன் வந்தோம். மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் கிரகணத்தை பார்க்க முடியவில்லை. மேகமூட்டத்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அடுத்த சூரிய கிரகணத்தை காண 12 ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும் என மாணவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.

ஏமாற்றம் அடைந்த மாணவர்கள்

இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி வெங்கடேசன் கூறுகையில், "இன்றைக்கு வானில் ஒரு அற்புதமான காட்சியை பார்த்திருக்கிறோம். வளைய சூரிய கிரகணம் எப்படி உருவாகிறது என்பதை நேரடியாக பார்த்துள்ளோம். தமிழ்நாட்டில் சில பகுதிகளில் குறிப்பாக ஊட்டி, கரூர் போன்ற பகுதிகளில் கிரகணம் தெரிந்தது. கோவையில் சில வினாடிகள் மட்டுமே கிரகணம் தெரிந்ததாக கூறப்படுகிறது.

அழகாக வானில் சூரியனை சுற்றியிருக்கும் நெருப்பு வளையம் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என மக்கள் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது. அறிவியல் குறித்து ஒரு நம்பிக்கையும், அறிவியலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் இந்த கிரகணம் ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: திருச்சியில் 3 நாட்களுக்கு மாபெரும் கலைகொண்டாட்டம்!

Intro:இன்றைய சூரிய கிரகத்தின் மூலம் அறிவியல் மீதான ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தும் இலக்கில் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி வெங்கடேசன் பேட்டி


Body:வானில் தோன்றும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான சூரியகிரகணம் இன்று இந்தியா இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தென்பட்டது தமிழகத்தில் கோவை திருப்பூர் ஈரோடு உதகை உள்ளிட்ட பகுதிகளில் சூரிய கிரகணம் தெளிவாக தெரியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சூரியகிரகணம் தெரியவில்லை கோவையில் மதுக்கரை பகுதியில் மட்டும் சில நொடிகள் கிரகணம் பார்க்க முடிந்தது இந்நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சூரிய கிரகணத்தை பார்க்க இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது இதற்காக நேற்றும் இன்றும் கிரகணங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது இந்நிலையில் இன்று காலை முதல் மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் சூரிய கிரகணத்தை காண வந்த பொதுமக்களும் மாணவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர் இது குறித்து மாணவர்கள் கூறுகையில் அரிய நிகழ்வான சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக தயாராக வந்தநிலையில் மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் கிரகணத்தை பார்க்க முடியவில்லை இது குறித்து பல்வேறு தகவல்கள் தெரிந்தும் நேரடியாக பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் வந்தபோது மேகமூட்டத்தால் தங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது அடுத்த சூரிய கிரகணத்தை காண 12 ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும் என மாணவர்கள் தெரிவித்தனர் எனினும் கிரகணங்கள் குறித்த கருத்தரங்கில் கிரகணம் ஏற்படும் போது என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் ,அது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுகளையும் பெற முடிந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி வெங்கடேசன் கூறுகையில் இன்றைக்கு வானில் ஒரு அற்புதமான காட்சியை பார்த்திருக்கிறோம் வளைய சூரிய கிரகணம் எப்படி உருவாகிறது என்பதை நேரடியாக பார்த்துள்ளோம் தமிழகத்தில் சில பகுதிகளில் குறிப்பாக ஊட்டி கரூர் போன்ற பகுதிகளில் கிரகணம் தெரிந்ததாகவும் சில இடங்களில் மேகமூட்டம் காரணமாக தெரியவில்லை கோவையில் சில வினாடிகள் மட்டுமே கிரகணம் தெரிந்ததாக கூறினர் அழகாக வானில் சூரியனை சுற்றி இருக்கும் நெருப்பு வளையம் கண்கொள்ளாக்காட்சியாக இருந்ததாகவும் பல லட்சக்கணக்கான மக்கள் வெளியில் வந்து இதை பார்த்ததாகவும் இளைஞர்கள் சிறுவர்கள் இதனால் உற்சாகம் அடைந்து அறிவியலை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அறிவியல் குறித்து ஒரு நம்பிக்கையும் அறிவியலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் இந்த கிரகணம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இயற்கை நிகழ்வான அறிவியல் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் தங்களுடைய இலக்கு அறிவியல் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி அதனை மாணவர்களிடையே கொண்டு சென்று அதனை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற குறிக்கோளில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.