ETV Bharat / state

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் - தொழில்துறையினர் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 10:33 PM IST

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கோவையில் டிச.12ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப் போவதாக, தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

12-ல் மனித சங்கிலி போராட்டம் - தொழில்துறையினர் அறிவிப்பு

கோயம்புத்தூர்: கோவையில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாட் ஜேம்ஸ் இன்று (டிச.5) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள தொழில் துறை நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு திரும்பப் பெற வேண்டும் என்பது பிரதான கோரிக்கை. இதில், கடந்த 90 நாட்களாக கிட்டதட்ட எட்டு கட்டப் போராட்டம் நடத்தினோம். இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்துத்துறை அமைப்புகளுடன் சேர்ந்து, நாங்கள் இந்த போராட்டங்களை செய்து வருகிறோம். அதற்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை 50% சதவீதத்தை நிறைவேற்றி தந்தனர்.

12-ல் மனித சங்கிலி போராட்டம்: இதில், பீக்கவர் மின் கட்டணமாக (peak hour electricity price), ரூ.3,500 மின் கட்டணமாக கட்டாயமாக வசூலிக்கப்பட்ட வருகின்றனர். இந்த தொகையை தவிர்க்க வேண்டும் என்றும், அதேபோன்று சோலார் மின் உற்பத்தியில் இருந்து விலக்கு அளிக்கவும், 3.ஏ.ஒன் என்ற மின் கட்டண விகிதாச்சாரத்தை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும் என வலிறுத்தினோம்.

மேலும், கிரில் ரோக் வெல்டிங் தொழிலில் 12 கிலோ வாட் மின் கட்டணத்திற்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கின்றனர். இதனைத் தவிர்க்கவும், வரும் டிசம்பர் 12ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். அதனை மாவட்ட தலைநகரில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம்.

தற்போதுள்ள மின் உயர்வால், நாட்டில் 48 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் தரும் தொழில், 1.80 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த மின் கட்டணத்தில் வருட வருவாயான ரூ.2,800 கோடி மின் கட்டணத்தொகையை திரும்பப் பெற வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

மும்முனை மின் கட்டணத்தை திரும்பப் பெறுக: மேலும் பேசிய அவர், 'தமிழக அரசு விதித்த 30 விதமான மின் கட்டணம் மாற்றி அமைத்ததில் பிரதானமாக மிக முக்கியமானதான ஐந்து கோரிக்கைகளான பீக்கவர் கட்டணம் அதற்கு மின் கட்டண மீட்டர்களை வைக்கக்கூடாது. நிலைக்கட்டணம், சோலார் உற்பத்தியில் சேவை கட்டணம், மும்முனை மின் கட்டணத்தை திரும்ப வேண்டும்.

இதில், முதலமைச்சருக்கு எங்கள் கோரிக்கையை கொண்டு செல்லாமல் அதிகாரிகள் அதிகாரம் செய்கின்றனர். தொழில் துறை உண்மையான கோரிக்கைகளை முன்னெடுத்து வரும் டிசம்பர் 12ஆம் தேதி கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் நஞ்சப்பா சாலை, கிராஸ்கட் ரோடு பகுதியில் பெரிய அளவில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். அதற்கு காவல்துறை அனுமதியும் பெற்று உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: ஈபிஎஸ் குறித்து கருத்து தெரிவிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

12-ல் மனித சங்கிலி போராட்டம் - தொழில்துறையினர் அறிவிப்பு

கோயம்புத்தூர்: கோவையில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாட் ஜேம்ஸ் இன்று (டிச.5) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள தொழில் துறை நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு திரும்பப் பெற வேண்டும் என்பது பிரதான கோரிக்கை. இதில், கடந்த 90 நாட்களாக கிட்டதட்ட எட்டு கட்டப் போராட்டம் நடத்தினோம். இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்துத்துறை அமைப்புகளுடன் சேர்ந்து, நாங்கள் இந்த போராட்டங்களை செய்து வருகிறோம். அதற்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை 50% சதவீதத்தை நிறைவேற்றி தந்தனர்.

12-ல் மனித சங்கிலி போராட்டம்: இதில், பீக்கவர் மின் கட்டணமாக (peak hour electricity price), ரூ.3,500 மின் கட்டணமாக கட்டாயமாக வசூலிக்கப்பட்ட வருகின்றனர். இந்த தொகையை தவிர்க்க வேண்டும் என்றும், அதேபோன்று சோலார் மின் உற்பத்தியில் இருந்து விலக்கு அளிக்கவும், 3.ஏ.ஒன் என்ற மின் கட்டண விகிதாச்சாரத்தை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும் என வலிறுத்தினோம்.

மேலும், கிரில் ரோக் வெல்டிங் தொழிலில் 12 கிலோ வாட் மின் கட்டணத்திற்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கின்றனர். இதனைத் தவிர்க்கவும், வரும் டிசம்பர் 12ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். அதனை மாவட்ட தலைநகரில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம்.

தற்போதுள்ள மின் உயர்வால், நாட்டில் 48 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் தரும் தொழில், 1.80 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த மின் கட்டணத்தில் வருட வருவாயான ரூ.2,800 கோடி மின் கட்டணத்தொகையை திரும்பப் பெற வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

மும்முனை மின் கட்டணத்தை திரும்பப் பெறுக: மேலும் பேசிய அவர், 'தமிழக அரசு விதித்த 30 விதமான மின் கட்டணம் மாற்றி அமைத்ததில் பிரதானமாக மிக முக்கியமானதான ஐந்து கோரிக்கைகளான பீக்கவர் கட்டணம் அதற்கு மின் கட்டண மீட்டர்களை வைக்கக்கூடாது. நிலைக்கட்டணம், சோலார் உற்பத்தியில் சேவை கட்டணம், மும்முனை மின் கட்டணத்தை திரும்ப வேண்டும்.

இதில், முதலமைச்சருக்கு எங்கள் கோரிக்கையை கொண்டு செல்லாமல் அதிகாரிகள் அதிகாரம் செய்கின்றனர். தொழில் துறை உண்மையான கோரிக்கைகளை முன்னெடுத்து வரும் டிசம்பர் 12ஆம் தேதி கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் நஞ்சப்பா சாலை, கிராஸ்கட் ரோடு பகுதியில் பெரிய அளவில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். அதற்கு காவல்துறை அனுமதியும் பெற்று உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: ஈபிஎஸ் குறித்து கருத்து தெரிவிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.