ETV Bharat / state

மன திருப்திக்காக ஆதரவற்றோருக்கு முடி திருத்தும் ரஜினி ரசிகர்! - Rajini fan of hair cut for those who do not support mental satisfaction

கோயம்புத்தூர்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சாலையோரத்தில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு முடிதிருத்தம் செய்த சிகை அலங்கார கலைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

rajini devaraj
rajini devaraj
author img

By

Published : Dec 24, 2019, 5:21 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். முடிதிருத்தும் தொழிலாளியான இவர், இடையர் பாளையத்தில் சிகை அலங்கார கடை வைத்துள்ளார். இவர் அவ்வப்போது கோவை அரசு மருத்துவமனையின் முன்பு உள்ள ஆதரவற்றோருக்கு முடி திருத்தம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான இவரை ரஜினி தேவராஜ் என்றே அப்பகுதி மக்கள் அழைப்பார்கள்.

ஆதரவற்றோருக்கு முடி திருத்தும் ரஜினி தேவராஜ்

இன்று முதலே உலக மக்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர். எனவே, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை முன்பு உள்ள ஆதரவற்றோருக்கு ரஜினி தேவராஜ் இலவசமாக சிகை அலங்காரம் செய்து பார்ப்பவரை வியக்கவைத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "10 ஆண்டுகளாக அரசு மருத்துவமனை முன்புள்ள ஆதரவற்றோருக்கு சிகை அலங்காரம் இலவசமாக செய்துவருகிறேன். என்னுடைய மன திருப்திக்காக இலவசமாக சிகை அலங்காரம் செய்கிறேன். எனது வாழ்நாளின் இறுதிவரை ஆதரவற்றோருக்கு நேரம் கிடைக்கும்போது இதுபோன்ற சிகை அலங்காரம் செய்வேன்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ரஜினி தேவராஜின் தன்னார்வ தொண்டை பாராட்டி பலரும் வாழ்த்துகள் கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்த போலி நிருபர்கள்.!

கோயம்புத்தூர் மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். முடிதிருத்தும் தொழிலாளியான இவர், இடையர் பாளையத்தில் சிகை அலங்கார கடை வைத்துள்ளார். இவர் அவ்வப்போது கோவை அரசு மருத்துவமனையின் முன்பு உள்ள ஆதரவற்றோருக்கு முடி திருத்தம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான இவரை ரஜினி தேவராஜ் என்றே அப்பகுதி மக்கள் அழைப்பார்கள்.

ஆதரவற்றோருக்கு முடி திருத்தும் ரஜினி தேவராஜ்

இன்று முதலே உலக மக்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர். எனவே, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை முன்பு உள்ள ஆதரவற்றோருக்கு ரஜினி தேவராஜ் இலவசமாக சிகை அலங்காரம் செய்து பார்ப்பவரை வியக்கவைத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "10 ஆண்டுகளாக அரசு மருத்துவமனை முன்புள்ள ஆதரவற்றோருக்கு சிகை அலங்காரம் இலவசமாக செய்துவருகிறேன். என்னுடைய மன திருப்திக்காக இலவசமாக சிகை அலங்காரம் செய்கிறேன். எனது வாழ்நாளின் இறுதிவரை ஆதரவற்றோருக்கு நேரம் கிடைக்கும்போது இதுபோன்ற சிகை அலங்காரம் செய்வேன்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ரஜினி தேவராஜின் தன்னார்வ தொண்டை பாராட்டி பலரும் வாழ்த்துகள் கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்த போலி நிருபர்கள்.!

Intro:கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சாலையோர ஆதரவற்றவர்களுக்கு முடிதிருத்தம் செய்த சிகை அலங்கார கலைஞர்...Body:கோவை மாவட்டம் சீரநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் முடிதிருத்தும் தொழிலாளியான இவர் இடையர் பாளையத்தில் சிகை அலங்கார கடை வைத்துள்ளார் இவர் அவ்வப்போது கோவை அரசு மருத்துவமனையில் முன்பு உள்ள ஆதரவற்றோருக்கு முடி திருத்தம் செய்வது வழக்கம் ரஜினி ரசிகராக உள்ள இவரை ரஜினி தேவராஜ் என அழைப்பர். இந்நிலையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை அடுத்து கோவை அரசு மருத்துவமனை முன்பு உள்ள ஆதரவற்றோருக்கு இலவசமாக சிகை அலங்காரம் செய்து இதுகுறித்து அவர் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக கோவை அரசு மருத்துவமனை முன்பு உள்ள ஆதரவற்றோருக்கு சிகை அலங்காரம் இலவசமாக செய்து வருவதாகவும் தன்னுடைய மன திருப்திக்காக இலவசமாக சிகை அலங்காரம் செய்வதாக தெரிவித்த அவர் தன் வாழ்நாளின் இறுதிவரை ஆதரவற்றோருக்கு நேரம் கிடைக்கும் போது இது போன்ற சிகை அலங்காரம் செய்வேன் எனவும் அவர் தெரிவித்தார்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.