ETV Bharat / state

‘காலில் சிக்கிய குச்சியை திண்டுக்கல் சீனிவாசனால் குனிந்து எடுக்க முடியவில்லை’ - முதலமைச்சர் பழனிசாமி

author img

By

Published : Feb 8, 2020, 5:43 PM IST

கோவை: காலில் சிக்கிய குச்சியை தன்னால் குனிந்து எடுக்க முடியவில்லை, அதனால்தான் பேரன்போல் இருந்த சிறுவனை உதவிக்கு அழைத்ததாக திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார் என்றும், இவ்விவகாரத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்துவது வருத்தம் அளிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தலைவாசல் கால்நடைப்பூங்கா  டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து முதல்வர்  திண்டுக்கல் சீனிவாசன்  ராஜேந்திர பாலாஜி சர்சை  rajendra balaji controversy  dindigul srinivasan tribe boy
ராஜேந்திர பாலாஜி ஒரு பக்திமான்

சேலம் தலைவாசல் பகுதியில் ஆசியாவின் பெரிய கால்நடைப் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தார்.

அப்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டிஎன்பிஎஸ்சி தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதில் நடைபெற்ற முறைகேடு குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பணியை தேர்வாணையம் செய்து வருகின்றது” என்றார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியின சிறுவனை செறுப்பு கழற்ற வைத்த விவகாரம் குறித்து பேசிய அவர், “அவர் வயதானவர், காலில் சிக்கிய குச்சியை குனிந்து எடுக்க முடியாததால் பேரன் வயதிலிருந்த சிறுவனை உதவிக்கு அழைத்துள்ளார். அந்தச் செயலுக்கு அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் இதனைப் பெரிதுப்படுத்துவது வருத்தம் அளிக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ராஜேந்திர பாலாஜி மீது என்ன குற்றச்சாட்டு இருக்கின்றது எனத் தெரியவில்லை. அவர் ஒரு பக்தி மான். அவர் தனது சொந்த கருத்தைக் கூறி வருகிறார். அது அதிமுகவுடைய கருத்தில்லை. இதனை அமைச்சர் ஜெயக்குமாரும் தெளிவுபடுத்தியிருக்கிறார்” என்றார்.

ராஜேந்திர பாலாஜி ஒரு பக்தி மான்

9,11ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “பள்ளிகளில் அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால், தகுதியை எப்படி நிர்ணயம் செய்ய முடியும். மாணவனின் தகுதியை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு. தேர்வே எழுதாமல் அனைவரையும் தேர்ச்சி செய்துவிட்டால், அவருடைய தகுதி என்ன என்பது யாருக்கும் தெரியாமல் போய்விடும்” என்றார்.

இதையும் படிங்க: குடியுரிமைச் சட்டத்தால் நாடே பாதிக்கும் - கனிமொழி எச்சரிக்கை

சேலம் தலைவாசல் பகுதியில் ஆசியாவின் பெரிய கால்நடைப் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தார்.

அப்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டிஎன்பிஎஸ்சி தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதில் நடைபெற்ற முறைகேடு குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பணியை தேர்வாணையம் செய்து வருகின்றது” என்றார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியின சிறுவனை செறுப்பு கழற்ற வைத்த விவகாரம் குறித்து பேசிய அவர், “அவர் வயதானவர், காலில் சிக்கிய குச்சியை குனிந்து எடுக்க முடியாததால் பேரன் வயதிலிருந்த சிறுவனை உதவிக்கு அழைத்துள்ளார். அந்தச் செயலுக்கு அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் இதனைப் பெரிதுப்படுத்துவது வருத்தம் அளிக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ராஜேந்திர பாலாஜி மீது என்ன குற்றச்சாட்டு இருக்கின்றது எனத் தெரியவில்லை. அவர் ஒரு பக்தி மான். அவர் தனது சொந்த கருத்தைக் கூறி வருகிறார். அது அதிமுகவுடைய கருத்தில்லை. இதனை அமைச்சர் ஜெயக்குமாரும் தெளிவுபடுத்தியிருக்கிறார்” என்றார்.

ராஜேந்திர பாலாஜி ஒரு பக்தி மான்

9,11ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “பள்ளிகளில் அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால், தகுதியை எப்படி நிர்ணயம் செய்ய முடியும். மாணவனின் தகுதியை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு. தேர்வே எழுதாமல் அனைவரையும் தேர்ச்சி செய்துவிட்டால், அவருடைய தகுதி என்ன என்பது யாருக்கும் தெரியாமல் போய்விடும்” என்றார்.

இதையும் படிங்க: குடியுரிமைச் சட்டத்தால் நாடே பாதிக்கும் - கனிமொழி எச்சரிக்கை

Intro:இடைநிற்றல் குறித்த புள்ளி விபரங்கள் யாரும் கொடுக்கவில்லை. இடைநிற்றலை தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டிBody:
கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர்

சேலம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழா, கால்நடை மருத்துவகல்லூரி அடிக்கல் நாட்டு விழா போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க வந்துள்ளேன்

டி.என்.பி.எஸ்.சி தன்னாட்சி பெற்ற அமைப்பு

அதில் நடைபெற்ற முறைகேடு குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.

தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பணியை தேர்வாணையம் செய்து வருகின்றது

டி.என்.பி.எஸ்.சி விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்று இந்த விரும்புகின்றது.
என்ன தவறு என்று காவல் விசாரணை நடத்தி வருகிறது. தவறில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயதானவர். காலில் சிக்கிய குச்சியை எடுக்க உதவிக்கு சிறுவனை அழைத்துள்ளார்.

குனிந்து எடுக்க முடியவில்லை என்பதால் பேரன் வயதில் இருந்த சிறுவனை உதவிக்கு அழைத்தாக அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்

அமைச்சர் அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்
இதை ஊடகங்கள் பெரிதாக வெளியிடுவது வருத்தம் அளிக்கிஎன்பது

வறட்சி என்ற சொல்லே இந்த ஆண்டு இல்லை.நல்ல மழை பெய்து குளங்கள் நிரம்பி இருக்கின்றது

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது என்ன குற்றச்சாட்டு இருக்கின்றது என தெரியவில்லை. அவர் ஒரு பக்தி மான்.

அவர் சொந்த கருத்தை சொல்லி இருக்கின்றார்.
அது அதிமுகவின் கருத்துகிடையாது என்பதையும் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருக்கின்றார்

9,11 வகுப்புகளுக்கு பொது தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு,
பள்ளிகளில் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டால் தகுதியை எப்படி நிர்ணயம் செய்ய முடியும். அந்த மாணவர் நமது ஊரில்தான் இருக்க முடியும்

மாணவனின் தகுதியை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு.

தேர்வே எழுதாமல் அனைவரும் பாஸ் செய்து விட்டால் அவருடைய தகுதி என்ன என்பது யாருக்கும் தெரியாமல் போய் விடும்.

இடைநிற்றல் குறித்த புள்ளி விபரங்கள் யாரும் கொடுக்கவில்லை. இடைநிற்றலை தடுக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.