ETV Bharat / state

மகா சிவராத்திரி: சத்குரு ஜக்கிக்கு நரேந்திர மோடி வாழ்த்து

author img

By

Published : Feb 28, 2022, 8:01 AM IST

ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு பிரதமர் நரேந்திர மோடி மகா சிவராத்திரி வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

ஜக்கி வாசுதேவிற்கு மஹா சிவராத்திரி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
ஜக்கி வாசுதேவிற்கு மஹா சிவராத்திரி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா நிறுவனர் சத்குருவுக்கு நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “புனிதமான மகா சிவராத்திரி கொண்டாட்டத்திற்குத் தாங்கள் செய்துவரும் ஏற்பாடுகளை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மகா சிவராத்திரி விழா அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கும் ஆதாரமாக உள்ளது.

ஜீவனிலிருந்து சிவனாக மாற வழிகாட்டும் ஆதியோகி

ஆதியோகி எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை நினைவுகூருவதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும். நம்முடைய மனம், உடல், புத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஜீவனிலிருந்து சிவனாக மாறுவதற்கு ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார். மக்களின் ஆன்மிக வளர்ச்சிக்காகவும், அவர்களின் வாழ்க்கை மேம்படுவதற்கும் நீங்கள் எடுத்துவரும் அயராத முயற்சிகள் மிகவும் போற்றத்தக்கவை.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாட்டிற்கான திட்டங்கள், கல்வி, மருத்துவம், சமூக மறுமலர்ச்சி எனப் பன்முகத் திட்டங்களை நீங்கள் முன்னெடுத்துச் செய்துவருகிறீர்கள். உங்களுடைய இந்த முயற்சிகள் அனைத்தும் எண்ணற்ற மக்களின் வாழ்வில் நேர்மறை மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இந்த மகா சிவராத்திரி விழா, மனிதகுலம் தனது அறியாமையிலிருந்தும், இருளிலிருந்தும் கடந்து வருவதற்கான பாதையை நமக்கு காட்டட்டும். மனித குலத்தின் மீது தனது ஆசிகளைப் பொழியுமாறு ஆதியோகியை நான் பிரார்த்திக்கிறேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திர மோடிக்கு நன்றி

இதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆதியோகியில் நடக்கும் மகா சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எங்களது நன்றிகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈஷா மகா சிவராத்திரி விழா மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இவ்விழா இணையதளம் வழியாக 170 நாடுகளிலிருந்து சுமார் 10 கோடிக்கும் அதிகமான மக்களின் பார்வையைக் கவர உள்ளதாக ஈஷா தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பாதுகாப்பு இல்லை, உணவிற்காக காத்திருக்கிறோம்..! - உக்ரைனில் தமிழ் மாணவர்

கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா நிறுவனர் சத்குருவுக்கு நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “புனிதமான மகா சிவராத்திரி கொண்டாட்டத்திற்குத் தாங்கள் செய்துவரும் ஏற்பாடுகளை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மகா சிவராத்திரி விழா அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கும் ஆதாரமாக உள்ளது.

ஜீவனிலிருந்து சிவனாக மாற வழிகாட்டும் ஆதியோகி

ஆதியோகி எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை நினைவுகூருவதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும். நம்முடைய மனம், உடல், புத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஜீவனிலிருந்து சிவனாக மாறுவதற்கு ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார். மக்களின் ஆன்மிக வளர்ச்சிக்காகவும், அவர்களின் வாழ்க்கை மேம்படுவதற்கும் நீங்கள் எடுத்துவரும் அயராத முயற்சிகள் மிகவும் போற்றத்தக்கவை.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாட்டிற்கான திட்டங்கள், கல்வி, மருத்துவம், சமூக மறுமலர்ச்சி எனப் பன்முகத் திட்டங்களை நீங்கள் முன்னெடுத்துச் செய்துவருகிறீர்கள். உங்களுடைய இந்த முயற்சிகள் அனைத்தும் எண்ணற்ற மக்களின் வாழ்வில் நேர்மறை மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இந்த மகா சிவராத்திரி விழா, மனிதகுலம் தனது அறியாமையிலிருந்தும், இருளிலிருந்தும் கடந்து வருவதற்கான பாதையை நமக்கு காட்டட்டும். மனித குலத்தின் மீது தனது ஆசிகளைப் பொழியுமாறு ஆதியோகியை நான் பிரார்த்திக்கிறேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திர மோடிக்கு நன்றி

இதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆதியோகியில் நடக்கும் மகா சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எங்களது நன்றிகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈஷா மகா சிவராத்திரி விழா மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இவ்விழா இணையதளம் வழியாக 170 நாடுகளிலிருந்து சுமார் 10 கோடிக்கும் அதிகமான மக்களின் பார்வையைக் கவர உள்ளதாக ஈஷா தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பாதுகாப்பு இல்லை, உணவிற்காக காத்திருக்கிறோம்..! - உக்ரைனில் தமிழ் மாணவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.