ETV Bharat / state

கருக்கலைப்பு செய்ய முயன்ற கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம்: போலி மருத்துவரின் வீட்டிற்கு சீல்!

கோவை: பொள்ளாச்சி அருகே கருக்கலைப்பு செய்ய முயன்ற கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில், போலி மருத்துவர் தலைமறைவாகியதையடுத்து அவரது மருத்துவமனை மற்றும் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.

கருக்கலைப்பு
author img

By

Published : May 1, 2019, 7:51 AM IST


பொள்ளாச்சி நெகமம் அடுத்த மெட்டுவாவி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் செல்வராஜ்-வனிதாமணி. இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகின்ற நிலையில், 4 மகன்கள், ஒரு மகன் என 5 குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து மீண்டும் கர்ப்பமான வனிதாமணி, 5 மாத சிசுவின் கரு வயிற்றில் இருக்கையில், கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து, ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியிடம் செல்ஃபோனில் பேசியுள்ளார்.

மறுநாள், மருத்துவர் முத்துலட்சுமி வனிதாமணிக்கு வடசித்தூரில் தனது வீட்டில் வைத்து கருக்கலைப்பு ஊசி போட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் வனிதாமணி உடல்நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது. உடனடியாக வனிதாமணியை காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை செல்கையில், போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் வனிதாமணியை மெட்டுவாவியில் உள்ள அவரது இல்லத்தில் விட்டுவிட்டு டாக்டர் முத்துலட்சுமி தலைமறைவானார். இதுகுறித்து வனிதாமணியின் மகன் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான போலி டாக்டர் முத்துலட்சுமியை தேடிவருகின்றனர்.

போலி மருத்துவரின் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்

இந்நிலையில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணா தலைமையில் அதிகாரிகள் போலி டாக்டர் முத்துலட்சுமியின் வீட்டை ஆய்வு செய்து, அவரின் வீட்டிற்கு சீல் வைத்தனர். இதுகுறித்து கிருஷ்ணா கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்தபோது முத்துலட்சுமி அரசு அங்கீகாரம் பெறாமல் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் முத்துலட்சுமியின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. போலி மருத்துவர் முத்துலட்சுமி தலைமறைவாக இருப்பதால் அவர் பிடிபட்டவுடன் முழு விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


பொள்ளாச்சி நெகமம் அடுத்த மெட்டுவாவி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் செல்வராஜ்-வனிதாமணி. இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகின்ற நிலையில், 4 மகன்கள், ஒரு மகன் என 5 குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து மீண்டும் கர்ப்பமான வனிதாமணி, 5 மாத சிசுவின் கரு வயிற்றில் இருக்கையில், கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து, ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியிடம் செல்ஃபோனில் பேசியுள்ளார்.

மறுநாள், மருத்துவர் முத்துலட்சுமி வனிதாமணிக்கு வடசித்தூரில் தனது வீட்டில் வைத்து கருக்கலைப்பு ஊசி போட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் வனிதாமணி உடல்நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது. உடனடியாக வனிதாமணியை காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை செல்கையில், போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் வனிதாமணியை மெட்டுவாவியில் உள்ள அவரது இல்லத்தில் விட்டுவிட்டு டாக்டர் முத்துலட்சுமி தலைமறைவானார். இதுகுறித்து வனிதாமணியின் மகன் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான போலி டாக்டர் முத்துலட்சுமியை தேடிவருகின்றனர்.

போலி மருத்துவரின் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்

இந்நிலையில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணா தலைமையில் அதிகாரிகள் போலி டாக்டர் முத்துலட்சுமியின் வீட்டை ஆய்வு செய்து, அவரின் வீட்டிற்கு சீல் வைத்தனர். இதுகுறித்து கிருஷ்ணா கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்தபோது முத்துலட்சுமி அரசு அங்கீகாரம் பெறாமல் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் முத்துலட்சுமியின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. போலி மருத்துவர் முத்துலட்சுமி தலைமறைவாக இருப்பதால் அவர் பிடிபட்டவுடன் முழு விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பொள்ளாச்சி -ஏப்ரல்-30
    பொள்ளாச்சி அருகே கருகலைப்பு செய்ய முயன்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம். போலி மருத்துவரின் வீட்டிற்கு சீல்.

         கோவை மாவட்டம் பொள்ளாச்சி நெகமம் அடுத்த மெட்டுவாவி அரிஜன காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வனிதாமணி வயது 37, இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 4 மகன்கள், 1 மகள் என  5 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த வனிதாமணி, 5 மாத கரு வயிற்றில் இருக்கும்போது,  நமக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளனர் இனி எதற்கு குழந்தை என  நினைத்து கருகலைப்பு செய்ய முடிவெடுத்தார். இது குறித்து வடசித்தூரில் உள்ள ஆயுர்வேத மருத்துவர்  முத்துலட்சுமியிடம்  போனில் பேசியுள்ளார். அப்போது டாக்டர் முத்துலட்சுமி, மற்றும் முத்துலட்சுமியின்  மகன் கார்த்திக் ஆகியோர்  மெட்டுவாவியில் உள்ள வனிதாமணி வீட்டிற்கு சென்று வனிதாமணிக்கு ஊசி போட்டு விட்டு, நாளைக்கு எனது வீட்டிற்கு வா என்று சொல்லி விட்டு வந்துள்ளனர். மறுநாள்  வனிதாமணி, வடசித்தூரில் உள்ள டாக்டர் முத்துலட்சுமி வீட்டிற்கு வந்துள்ளார். டாக்டர் முத்துலட்சுமி,  வனிதாமணிக்கு கருக்கலைப்பு  ஊசி போட்டு உள்ளார். சிறிது நேரத்தில் வனிதாமணி உடல்நிலை மோசமானதாக கூறப்படுகிறது.  உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போங்கள் என்று கூறிய டாக்டர்,தனது  காரில் வனிதாமணி யை ஏற்றிக்கொண்டு  மகன் கார்த்திக், செல்வராஜ் ஆகியோருடன் பொள்ளாச்சி  சென்று உள்ளனர். ஆனால் பொள்ளாச்சி செல்லும் வழியில் வனிதாமணி பரிதாபமாக இறந்து விடுகிறார். உடனே,  வனிதாமணியை மெட்டுவாவியில் உள்ள அவரது இல்லத்தில்  விட்டுவிட்டு டாக்டர் முத்துலட்சுமி தலைமறைவானார்.  இது குறித்து வனிதாமணியின்  மகன் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான போலி டாக்டர் முத்துலட்சுமியை  தேடிவருகின்றனர். 

 இந்நிலையில் சுகாதாரத் துறை இணை இயக்குனர் டாக்டர் திருமதி கிருஷ்ணா தலைமையில் அதிகாரிகள் போலி டாக்டர் முத்துலட்சுமியின் வீட்டை ஆய்வு செய்ய  வந்தபோது அவரின் வீடு பூட்டி இருந்ததால் வீட்டைச்சுற்றி ஆய்வு செய்தனர். அங்கு ஊசி மற்றும் மருந்துகள் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தன.  அதை தொடர்ந்து போலி டாக்டர் முத்துலட்சுமியின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுபற்றி
 சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் திருமதி கிருஷ்ணா கூறும்போது இந்த சம்பவம் தொடர்பாக முத்துலட்சுமி வீட்டிற்கு ஆய்வு செய்ய வந்த போது வீடு பூட்டி இருந்ததால்  வீட்டைச் சுற்றி ஆய்வு செய்தோம் அங்கு அரசால் முறையாக அனுமதி பெற்ற மருத்துவர்கள் மட்டுமே பரிந்துரைக்க வேண்டிய மருந்துகளும் ஊசி போடப் பயன்படும் சிரிஞ்சுகளும் கிடந்தன. முத்துலட்சுமி அரசு அங்கீகாரம் பெறாமல்  மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் முத்துலட்சுமியின் இல்லத்திற்கு  சீல் வைக்கப்பட்டது.  போலி மருத்துவர் முத்துலட்சுமி தலைமறைவாக இருப்பதால் அவர் பிடிபட்டவுடன் முழு விசாரணைக்கு பிறகு என்ன நடவடிக்கை என  தெரிய வரும் என தெரிவித்தார்.  இந்த சம்பவத்தால் வடசித்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 பேட்டி: டாக்டர் திருமதி கிருஷ்ணா- சுகாதாரத்துறை இணை இயக்குனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.