ETV Bharat / state

மருமகள் கடித்ததில் மாமியாருக்கு தலையில் ஆறு தையல்...

author img

By

Published : Dec 16, 2019, 6:21 PM IST

பொள்ளாச்சி: குடும்பத் தகராறில் மருமகள் கடித்ததால் காயமடைந்த மாமியாருக்கு தலையில் ஆறு தையல் போடப்பட்டுள்ளது. இதையடுத்து மாமியார் அளித்த புகாரின் பேரில் மருமகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

mother-in-law
mother-in-law

பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி(62). இவர் பத்திர எழுத்தர் ஆவார். நாகேஸ்வரியின் மகன் சரவணகுமார் (38) கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சின்னாம் பாளையத்தைச் சேர்ந்த கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

சரவணகுமார் குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்றதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி தொடர்ந்து கண்டித்ததால் சரவணகுமார் அவ்வபோது தனது தாயார் நாகேஸ்வரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால், கல்பனாவுக்கும் மாமியார் நாகேஸ்வரிக்கும் தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

கடந்தாண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட சண்டையில் மாமியார் நாகேஸ்வரியை மருமகள் கல்பனா தாக்கியுள்ளார். இதுகுறித்து நாகேஸ்வரி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி மருமகள் கல்பனா அடிக்கடி மாமியார் நாகேஸ்வரியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

மருமகள் கடித்ததால் தலையில் காயமடைந்த நாகேஸ்வரி

இதனிடையே கடந்த சனிக்கிழமையன்று நாகேஸ்வரி மின்நகர் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கல்பனா அவருடன் தகராறில் ஈடுபட்டதுடன் தாக்கி அவரது தலை பகுதியில் பயங்கரமாக கடித்துள்ளார். இதில் நாகேஸ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற நாகேஸ்வரிக்கு மருத்துவர்கள் ஆறு தையல் போட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மகாலிங்கபுரம் காவல் துறையினர் கல்பனாவை கைது செய்தனர்.

பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி(62). இவர் பத்திர எழுத்தர் ஆவார். நாகேஸ்வரியின் மகன் சரவணகுமார் (38) கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சின்னாம் பாளையத்தைச் சேர்ந்த கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

சரவணகுமார் குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்றதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி தொடர்ந்து கண்டித்ததால் சரவணகுமார் அவ்வபோது தனது தாயார் நாகேஸ்வரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால், கல்பனாவுக்கும் மாமியார் நாகேஸ்வரிக்கும் தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

கடந்தாண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட சண்டையில் மாமியார் நாகேஸ்வரியை மருமகள் கல்பனா தாக்கியுள்ளார். இதுகுறித்து நாகேஸ்வரி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி மருமகள் கல்பனா அடிக்கடி மாமியார் நாகேஸ்வரியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

மருமகள் கடித்ததால் தலையில் காயமடைந்த நாகேஸ்வரி

இதனிடையே கடந்த சனிக்கிழமையன்று நாகேஸ்வரி மின்நகர் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கல்பனா அவருடன் தகராறில் ஈடுபட்டதுடன் தாக்கி அவரது தலை பகுதியில் பயங்கரமாக கடித்துள்ளார். இதில் நாகேஸ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற நாகேஸ்வரிக்கு மருத்துவர்கள் ஆறு தையல் போட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மகாலிங்கபுரம் காவல் துறையினர் கல்பனாவை கைது செய்தனர்.

Intro:arrestBody:arrestConclusion:பொள்ளாச்சி அருகே மருமகள் கடித்ததில் மாமியாருக்கு தலையில் ஆறு தையல் மாமியார் கொடுத்த புகாரில்
 மருமகள் கைது

பொள்ளாச்சி டிசம்பர் :16

பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி 62 பத்திர எழுத்தர். இவரது மகன் சரவணகுமார் 38. சரவணகுமார் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சின்னாம் பாளையத்தை சேர்ந்த கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார் .இந்நிலையில் சரவணகுமார் குடிப்பழக்கத்தில் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது .இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி தொடர்ந்து கண்டித்ததால் சரவணகுமார் தனது தாயார் நாகேஸ்வரி வீட்டுக்கு வந்துவிடுவார் . இதனால் கல்பனா நாகேஸ்வரி யுடன் வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார் .இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாமியார் மருமகள் இடையே தகராறு ஏற்பட்டதில் மாமியாரை மருமகள் கல்பனா தாக்கியுள்ளார் .இதுகுறித்து நாகேஸ்வரி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .இந்த வழக்கை வாபஸ் பெறக் கோரி மருமகள் கல்பனா அடிக்கடி மாமியார் நாகேஸ்வரி யை மிரட்டியதாக கூறப்படுகிறது .இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று நாகேஸ்வரி மின் நகர் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கல்பனா அவருடன் தகராறில் ஈடுபட்டதுடன் தாக்கி அவரது தலை பகுதியில் பயங்கரமாக கடித்துள்ளார் .இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்ற நாகேஸ்வரிக்கு மருத்துவர்கள் ஆறு தையல் போட்டு உள்ளனர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகள் கல்பனாவை கைது செய்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.