ETV Bharat / state

கனமழையால் சேதமடைந்த புதிய குடியிருப்புகள்! கடமைக்காக வீடு கொடுத்த அரசு! - govt did not complete work

கோவை: கனமழை காரணமாக புதியதாக கட்டப்பட்ட குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் சேதம் ஏற்பட்டதால் அங்கு தங்கியிருக்கக்கூடிய மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

கடமைக்காக வீடு கொடுத்த அரசாங்கம்
author img

By

Published : Aug 19, 2019, 3:14 PM IST

கோவை மாவட்டம், கோவைப்புதூர் அடுத்த அறிவொளி நகர் அருகே குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட மூன்றடுக்கு கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில், மொத்தம் 960 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பெய்த கனமழையால் வீட்டிற்குள் நீர் புகுந்து குடியிருப்புகள் சேதமாகின. அப்போதுதான் தரம் இல்லாத பொருட்களை கொண்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.

கன மழையால் சேதமான புதிய குடியிருப்புகள்

மேலும் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் மழைநீர் வடிய போதுமான பைப்புகள் அமைக்காமலும் அரைகுறையாக ஓடுகளை ஒட்டியும் மேல் தளங்களில் உள்ள வீடுகளுக்கு ஜன்னல்கள் அமைக்காமலும் வைத்திருக்கின்றனர்.

இது குறித்து மக்கள் அலுவலர்களிடம் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டத்திற்கு தயாராகியுள்ளனர். அதையறிந்துவந்த அலுவலர்கள் கண் துடைப்பிற்காக வீட்டின் கூரையில் துளை மூலம் வேதிப்பொருள்கள் செலுத்துவதாகக் கூறி சென்றுள்ளதாகவும் ஏதோ வீடு கொடுக்க வேண்டும் என்ற கடமைக்காகவே கொடுத்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம், கோவைப்புதூர் அடுத்த அறிவொளி நகர் அருகே குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட மூன்றடுக்கு கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில், மொத்தம் 960 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பெய்த கனமழையால் வீட்டிற்குள் நீர் புகுந்து குடியிருப்புகள் சேதமாகின. அப்போதுதான் தரம் இல்லாத பொருட்களை கொண்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.

கன மழையால் சேதமான புதிய குடியிருப்புகள்

மேலும் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் மழைநீர் வடிய போதுமான பைப்புகள் அமைக்காமலும் அரைகுறையாக ஓடுகளை ஒட்டியும் மேல் தளங்களில் உள்ள வீடுகளுக்கு ஜன்னல்கள் அமைக்காமலும் வைத்திருக்கின்றனர்.

இது குறித்து மக்கள் அலுவலர்களிடம் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டத்திற்கு தயாராகியுள்ளனர். அதையறிந்துவந்த அலுவலர்கள் கண் துடைப்பிற்காக வீட்டின் கூரையில் துளை மூலம் வேதிப்பொருள்கள் செலுத்துவதாகக் கூறி சென்றுள்ளதாகவும் ஏதோ வீடு கொடுக்க வேண்டும் என்ற கடமைக்காகவே கொடுத்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

Intro:கோவையில் பெய்த கன மழைக்கு புதியதாக கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் சேதம் - வீட்டிற்குள் நீர் வடிவதால் அவதி.Body:
கோவை மாவட்டம், கோவைப்புதூர் அடுத்த அறிவொளி நகர் அருகே குடிசைமாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த இதில், 960 வீடுகள் உள்ளது. 3 அடுக்கு கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தரம் இல்லாத பொருட்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது. மொட்டை மாடியில் சுருக்கி என்னும் தளம் அமைக்காமல் அரைகுறையாக ஓடுகளை ஒட்டியுள்ளனர். மேலும், மழைநீர் வடிய போதுமான பைப்புகள் அமைக்காததால் மழை நீர் மொட்டை மாடியில் தேங்கியுள்ளது. இதனால், மேல் தளத்தில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர், மழைப்போல் விழுகின்றது. 26 ம் எண் பிளாக்கில், ரேவதி என்பவருக்கு சொந்தமான 827, சுகுணா என்பவருக்கு சொந்தமான 831, மாதவி என்பவருக்கு சொந்தமான 832 ஆகிய வீடுகளில் முழுவதும் உள்ளே மழை நீர் வடிந்து வருகின்றது. இதுதவிர அனைத்து வீடுகளும் மழைநீரால் சுவர்கள் ஊறிபோயுள்ளது. இதனால், மின் விளக்குகளுன் சுவிட்சுகளில் மின்சாரம் பாய்ந்து, மின்சாரம் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மேல் தளங்களில் உள்ள வீடுகளுக்கு ஜன்னல்களும் அமைக்கப்பட வில்லை. இந்த கட்டிட்டம் கட்டப்பட்டு, 8 மாதங்களுக்கு முன்புதான் அனைவரும் குடிவந்துள்ள நிலையில், இந்த கட்டிடங்கள் தரம் இல்லாமல் கட்டப்பட்டதால் பழைய கட்டிடத்தை போன்று காட்சியளிக்கின்றது.

இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளிடம் கூறி எந்த நடவடிக்கையும் எடுக்காதவர்கள் போராட்டத்திற்கு தயாரானதை அறிந்து, கண் துடைப்பிற்காக வந்து வீட்டின் கூரையில் துளை மூலம் கெமிக்கல் செலுத்துவதாக கூறி சென்றுள்ளதாகவும், கடமைக்காக ஏதோ வீடு கொடுக்க வேண்டும் என கொடுத்து சென்றுள்ளதாகவும், குழந்தைகளுக்கு இதனால், நோய்கள் தாக்கி உள்ளதாகவும் பேட்டியின்போது அங்கு வசித்து வரும் பொதுமக்கள் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.