ETV Bharat / state

'விக்ரம் லேண்டர் குறித்த எந்த தகவலையும் நாசா வெளியிடவில்லை' - இஸ்ரோ விஞ்ஞானி - விக்ரம் லேண்டர் குறித்து நாசா

கோவை: விக்ரம் லேண்டர் பற்றிய எந்த தகவலையும் நாசா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என இஸ்ரோ விஞ்ஞானி சோம்நாத் கூறியுள்ளார்.

v
author img

By

Published : Sep 19, 2019, 7:06 PM IST

Updated : Sep 19, 2019, 8:51 PM IST

பொள்ளாச்சி அடுத்த குளத்துபாளையம் பகுதியில் இருந்து இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட் நாசிலலில் பயன்படுத்தப்படும் கார்பன் பேப்ரிக் தயாரிப்பு தொழிற்சாலையின் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரின் இயக்குனர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”ராக்கெட் உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பதன் மூலம் அமெரிக்காவில் இருந்து பலகோடி செலவு செய்து இறக்குமதி செய்வது தவிர்க்கப்படுகிறது.

துணி மட்டும்மல்லாது, இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் ராக்கெட் உபகரணங்கள் தயாரிப்பதற்கு முன் வருமாயின் பல வகையில் இந்திய பொருளாதாரம் அதிகரிக்கும்.

விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் கிடைக்கவிருந்த 15 நாட்களில் 14 நாட்கள் முடிந்துவிட்டது. இதுவரை விக்ரம் லேண்டரை பற்றிய புகைப்ப்படம் உள்ளிட்ட எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. மேலும், நாசாவும் எங்களுக்கு லேண்டர் குறித்த எந்த அதிகரப்பூர்வ தகவல்களையும் அனுப்பவில்லை.

'லேண்டர் குறித்த எந்த தகவலும் நாசா வெளியிடவில்லை'

சந்திரயான்-2 பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. விரைவில் அதுகுறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இஸ்ரோ விஞ்ஞானிகள் PSLV C47, 48 மற்றும் GSLV F10 உள்ளிட்ட செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டிவருகின்றனர். அதுமட்டுமின்றி, இஸ்ரோ மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க:விக்ரம் லேண்டரை கண்டுபிடிப்பதில் சிரமம்... கைவிரித்த நாசா?

பொள்ளாச்சி அடுத்த குளத்துபாளையம் பகுதியில் இருந்து இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட் நாசிலலில் பயன்படுத்தப்படும் கார்பன் பேப்ரிக் தயாரிப்பு தொழிற்சாலையின் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரின் இயக்குனர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”ராக்கெட் உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பதன் மூலம் அமெரிக்காவில் இருந்து பலகோடி செலவு செய்து இறக்குமதி செய்வது தவிர்க்கப்படுகிறது.

துணி மட்டும்மல்லாது, இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் ராக்கெட் உபகரணங்கள் தயாரிப்பதற்கு முன் வருமாயின் பல வகையில் இந்திய பொருளாதாரம் அதிகரிக்கும்.

விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் கிடைக்கவிருந்த 15 நாட்களில் 14 நாட்கள் முடிந்துவிட்டது. இதுவரை விக்ரம் லேண்டரை பற்றிய புகைப்ப்படம் உள்ளிட்ட எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. மேலும், நாசாவும் எங்களுக்கு லேண்டர் குறித்த எந்த அதிகரப்பூர்வ தகவல்களையும் அனுப்பவில்லை.

'லேண்டர் குறித்த எந்த தகவலும் நாசா வெளியிடவில்லை'

சந்திரயான்-2 பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. விரைவில் அதுகுறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இஸ்ரோ விஞ்ஞானிகள் PSLV C47, 48 மற்றும் GSLV F10 உள்ளிட்ட செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டிவருகின்றனர். அதுமட்டுமின்றி, இஸ்ரோ மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க:விக்ரம் லேண்டரை கண்டுபிடிப்பதில் சிரமம்... கைவிரித்த நாசா?

Intro:chandrayanBody:chandrayanConclusion:விக்ரம் லேண்டர் இரண்டு பற்றிய எந்த தகவலும் நாசா எங்களுக்கு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை பொள்ளாச்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி தகவல்.


பொள்ளாச்சி- செப்- 19


பொள்ளாச்சி அடுத்த குளத்துபாளையம் பகுதியில் இருந்து இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பப்படும் ராகெட் நாசிலிலில்  பயன்படுத்தப்படும் கார்பன் பேப்ரிக் துணியானது தயாரிப்பு 

தொழிற்சாலை துவக்கம்.  இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி சோம்நாத் கூறுகையில். ராக்கெட் உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பதன் மூலம் அமெரிக்காவில் இருந்து பலகோடி செலவு செய்து இறக்குமதி செய்வது தவிர்க்கப்படுகிறது. இந்த துணி மட்டும் அல்லாது இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் முன்வந்து ராக்கெட்டிற்கான உபகரணங்களை தயாரிப்பதற்கு முன்வருமாயின். பல வகையில் நமக்கு பணம் மிச்சமாகும். தற்போது விக்ரம் லண்டரில் இருந்து தகவல் கிடைக்க இருந்த 15 நாட்களில்

 ஏற்கானமே 14நாட்கள் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு நாள் மீதமுள்ள நிலையில் இது வரை விக்ரம் லேண்டரை பற்றிய புகைப்படமோ எந்த தகவலும்  கிடைக்கவில்லை. விகரம் லேண்டரை பற்றிய தகவல் இதுவரை நாசா எங்களுக்கு அனுப்பவில்லை. சந்திரயான் இரண்டு பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது விரைவில் அது பற்றிய தகவல்கள் அறிவிக்கப்படும். மேலும் இஸ்ரோ விஞானிகள் PSLV C47, 48 மற்றும்  GSLV F10 உள்ளிட்ட செயற்கை கோள்களில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் இஸ்ரோ ஆனது மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. ராக்கெட் தயாரிப்புக்கான உபகரணங்கள் தயாரிப்பது மற்றும் வாங்குவதற்கு அரசால் அளவான பணமே ஒதுக்கப்பட்டுள்ளது. நாசா, சைனா, ஐரோப்பியன் உள்ளிட்ட ஸ்பேஸ் ஏஜெண்டுகள் பெரும் பணத்தில் 10 சதவிகிதம் தான் இந்தியாவில் உள்ள இஸ்ரோவிற்கு கிடைப்பதாகவும் வருத்தம் தெரிவித்தார். இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் முதலிடம் வகிக்கும் என்றும் நிகழ்ச்சியில் பங்குபெற்ற விக்ரம் சரபாய் ஸ்பேஸ் சென்டரின் இயக்குனர் சோம்நாத் பொள்ளாச்சியில் பேட்டி.


பேட்டி- சோம்நாத் ( இஸ்ரோ விஞ்ஞானி)
Last Updated : Sep 19, 2019, 8:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.