ETV Bharat / state

கோவையில் மொகரம் சிறப்பு தொழுகை

author img

By

Published : Aug 9, 2022, 9:23 PM IST

கோவையில் மொகரம் பண்டிகையை ஒட்டி பெண்களும், சிறுமிகளும் மார்பில் அடித்துக் கொண்டு அரபு மொழியில் துக்கத்தை வெளிப்படுத்த, ஆண்களும், சிறுவர்களும் கத்தியால் உடலில் கத்தி போட்டுக்கொண்டு துக்கத்தை வெளிப்படுத்தினர்.

கோவையில் மொகரம் சிறப்பு தொழுகை
கோவையில் மொகரம் சிறப்பு தொழுகை

கோவை: போத்தனூர் பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தினர். கருப்பு உடை அணிந்தபடி இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் உசேன் போரில் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் மொகரம் பண்டிகையை துக்க நிகழ்வாக கடைபிடித்து வருகின்றனர்.

இஸ்லாமிய நாட்காட்டியின் படி முதல் மாதமான மொகரம் மாதத்தின் முதல் தேதியில் இருந்து 10 ம் தேதி இமாம் உசேன் மறைவினை நினைவு கூர்ந்த ஷியா பிரிவு இஸ்லாமியர்கள், இன்று போத்தனூர் பகுதியில் பிற்பகலில் அரபு மொழியில் துக்க பாடல்கள் பாடி வழிபாட்டில் ஈடுபட்டனர். துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக வழிபாடு நடத்தும் இடத்தில் பஞ்சதத்தன் என்ற கொடி மரத்தில் கருப்பு கொடி ஏற்றி வைத்து துக்கத்தை வெளிப்படுத்தினர்.

கோவையில் மொகரம் சிறப்பு தொழுகை

பெண்களும், சிறுமிகளும் மார்பில் அடித்துக் கொண்டு அரபு மொழியில் துக்கத்தை வெளிப்படுத்த, ஆண்களும், சிறுவர்களும் கத்தியால் உடலில் கத்தி போட்டுக்கொண்டும், தலையில் காயத்தை ஏற்படுத்திக்கொண்டும் கைகளால் நெஞ்சில் அடித்தபடி துக்கத்தை அனுசரித்தனர். மொகரம் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் துக்கதினமாக அனுசரித்து வருவதாகவும், இதன் ஒரு பகுதியாகவே கோவையில் வசிக்கும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒன்று கூடி துக்கத்தை வெளிப்படுத்தி இருப்பதாக ஷியா பிரிவினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Video:மாலை மரியாதையுடன் பன்றிகளை ஊர்வலமாக அழைத்துச்செல்லும் விநோத வழிபாடு

கோவை: போத்தனூர் பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தினர். கருப்பு உடை அணிந்தபடி இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் உசேன் போரில் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் மொகரம் பண்டிகையை துக்க நிகழ்வாக கடைபிடித்து வருகின்றனர்.

இஸ்லாமிய நாட்காட்டியின் படி முதல் மாதமான மொகரம் மாதத்தின் முதல் தேதியில் இருந்து 10 ம் தேதி இமாம் உசேன் மறைவினை நினைவு கூர்ந்த ஷியா பிரிவு இஸ்லாமியர்கள், இன்று போத்தனூர் பகுதியில் பிற்பகலில் அரபு மொழியில் துக்க பாடல்கள் பாடி வழிபாட்டில் ஈடுபட்டனர். துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக வழிபாடு நடத்தும் இடத்தில் பஞ்சதத்தன் என்ற கொடி மரத்தில் கருப்பு கொடி ஏற்றி வைத்து துக்கத்தை வெளிப்படுத்தினர்.

கோவையில் மொகரம் சிறப்பு தொழுகை

பெண்களும், சிறுமிகளும் மார்பில் அடித்துக் கொண்டு அரபு மொழியில் துக்கத்தை வெளிப்படுத்த, ஆண்களும், சிறுவர்களும் கத்தியால் உடலில் கத்தி போட்டுக்கொண்டும், தலையில் காயத்தை ஏற்படுத்திக்கொண்டும் கைகளால் நெஞ்சில் அடித்தபடி துக்கத்தை அனுசரித்தனர். மொகரம் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் துக்கதினமாக அனுசரித்து வருவதாகவும், இதன் ஒரு பகுதியாகவே கோவையில் வசிக்கும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒன்று கூடி துக்கத்தை வெளிப்படுத்தி இருப்பதாக ஷியா பிரிவினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Video:மாலை மரியாதையுடன் பன்றிகளை ஊர்வலமாக அழைத்துச்செல்லும் விநோத வழிபாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.