ETV Bharat / state

காவிரியில் வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிக்க நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன்

author img

By

Published : Apr 29, 2023, 9:51 PM IST

கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

காவிரியில் வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிக்க நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன்
காவிரியில் வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிக்க நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன்

அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கார்பன் சமநிலை குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 29) நடைபெற்றது. ‘கார்பன் நியூட்ரல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன், “காலநிலை மாற்ற பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

நவீன தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி உள்ள மாவட்டமாக கோவை வளர்ந்து வருகிறது. இந்தியாவில் காலநிலை மாற்றத்தினால் அதிக பாதிப்பு உள்ள இரண்டு மாநிலம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம், போக்குவரத்து மற்றும் தொழில்துறைதான் கார்பன்களை அதிக அளவில் வெளியிடுகின்றன.

கார்பன் வெளியேற்றத்தில் அதிக அளவில் வெளியிடும் நாடுகள், சீனா மற்றும் அமெரிக்கா. நாம் (இந்தியா) 5வது இடத்தில் இருக்கிறோம். கார்பன் சமநிலை என்ற இலக்கை எளிதில் அடைய முடியாது. எங்கள் ஊரில் வெப்பம் 105 டிகிரியை எட்டி உள்ளது. எனது வாழ்நாளில் இவ்வளவு வெப்பத்தை இதற்கு முன் பார்த்ததில்லை.

ஆண்டுக்கு 10 கோடி மரங்களை நடவு செய்ய இலக்கு வைத்துள்ளோம். ராமேஸ்வரம் மற்றும் ராஜபாளையம் ஆகிய இரண்டு நகராட்சிகள் கார்பன் இலக்கை எட்ட திட்டங்கள் தொடங்கி உள்ளோம். கன்னியாகுமரி மாவட்டத்திலும் அடுத்த பணிகளை தொடங்க உள்ளோம்.

மேலும், டெல்டா மண்டலமான 5 மாவட்டங்களில் கார்பன் வெளியேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். கோவையில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பயோ மெட்ரிக் முறைகளை கையாளுவதால் விரைவில் இரண்டு ஏக்கர் நிலம் மீட்கப்படும். இளைஞர்கள் நீர் நிலைகள் பாதுகாப்பது குறித்து செயல்பட்டு வருவது மகிழ்ச்சி. அந்த இளைஞர்களை பாராட்ட 100 பேருக்கு, தலா ஒரு லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் வரை பரிசு அளிக்க உள்ளோம்.

மேலும், எங்காவது பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது. அந்த கோபம் ஒவ்வொரு மனிதருக்கும் வர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் மற்ற உயிர்களைப் பாதிக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. ‘மீண்டும் மஞ்சப்பை’ என்பது அற்புதமான திட்டம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து கார்பன் சமநிலை குறித்த புத்தகத்தை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், “2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலை என்ற அடிப்படையில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

பொது இடங்களில் மரங்களை நட, போக்குவரத்துகளில் ஏற்படக் கூடிய கார்பன் குறைப்பு, நீர் நிலைகளை பாதுகாப்பது ஆகிய தலைப்புகளில் நடைபெற்றது. கார்பன் நியூட்ரல் அடிப்படையில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. கோவையில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதனை அதிகப்படுத்துவோம்.

தமிழ்நாட்டில் 10 கோடி மரம் நடவு செய்யப்படும். இந்த இலக்கை நோக்கி செயல்படுகிறோம். ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் 70 லட்சம் மரங்கள் நடவு செய்வதாக அறிவிக்கிறார். 6 லட்சத்து 40 ஆயிரம் மரங்களை உணவுத்துறை அமைச்சர் நடவு செய்துள்ளார். தேசிய பசுமை தீர்ப்பாயம் மூலமாக செங்கல் சூளை தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரத் துறை அமைச்சர், அறிவிப்பு இரண்டில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் என அறிவித்துள்ளார். வெளிநாட்டு மரங்களை நடவு செய்வதால் எந்த பயனும் இல்லை. வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டால், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்.

நாட்டு மரங்கள்தான் நடவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளோம். பொள்ளாச்சி காயில் இண்டஸ்ட்ரீ நிலத்தடி நீர் நிலைகள் பாதிப்பு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். மரங்களை நடவு செய்வது முக்கியம் இல்லை, அதனை முறையாக பராமரித்து வளர்க்க வேண்டும்.

கர்நாடக தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் அமிலம் கலந்த நீர், பெங்களூரில் இருந்து வெளியேறும் கழிவு நீர் காவரி ஆற்றில் கலக்கப்படுவதால் கெலவரப்பள்ளி அணைக்கட்டில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளர் கர்நாடக மாநில அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கழிவுநீரை சுத்திகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள வழிகாட்டல்படி செயல்படுத்தப்படும்” என கூறினார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் மேயர் கல்பனா ஆனந்த் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்துக - கர்நாடக அரசுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்!

அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கார்பன் சமநிலை குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 29) நடைபெற்றது. ‘கார்பன் நியூட்ரல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன், “காலநிலை மாற்ற பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

நவீன தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி உள்ள மாவட்டமாக கோவை வளர்ந்து வருகிறது. இந்தியாவில் காலநிலை மாற்றத்தினால் அதிக பாதிப்பு உள்ள இரண்டு மாநிலம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம், போக்குவரத்து மற்றும் தொழில்துறைதான் கார்பன்களை அதிக அளவில் வெளியிடுகின்றன.

கார்பன் வெளியேற்றத்தில் அதிக அளவில் வெளியிடும் நாடுகள், சீனா மற்றும் அமெரிக்கா. நாம் (இந்தியா) 5வது இடத்தில் இருக்கிறோம். கார்பன் சமநிலை என்ற இலக்கை எளிதில் அடைய முடியாது. எங்கள் ஊரில் வெப்பம் 105 டிகிரியை எட்டி உள்ளது. எனது வாழ்நாளில் இவ்வளவு வெப்பத்தை இதற்கு முன் பார்த்ததில்லை.

ஆண்டுக்கு 10 கோடி மரங்களை நடவு செய்ய இலக்கு வைத்துள்ளோம். ராமேஸ்வரம் மற்றும் ராஜபாளையம் ஆகிய இரண்டு நகராட்சிகள் கார்பன் இலக்கை எட்ட திட்டங்கள் தொடங்கி உள்ளோம். கன்னியாகுமரி மாவட்டத்திலும் அடுத்த பணிகளை தொடங்க உள்ளோம்.

மேலும், டெல்டா மண்டலமான 5 மாவட்டங்களில் கார்பன் வெளியேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். கோவையில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பயோ மெட்ரிக் முறைகளை கையாளுவதால் விரைவில் இரண்டு ஏக்கர் நிலம் மீட்கப்படும். இளைஞர்கள் நீர் நிலைகள் பாதுகாப்பது குறித்து செயல்பட்டு வருவது மகிழ்ச்சி. அந்த இளைஞர்களை பாராட்ட 100 பேருக்கு, தலா ஒரு லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் வரை பரிசு அளிக்க உள்ளோம்.

மேலும், எங்காவது பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது. அந்த கோபம் ஒவ்வொரு மனிதருக்கும் வர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் மற்ற உயிர்களைப் பாதிக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. ‘மீண்டும் மஞ்சப்பை’ என்பது அற்புதமான திட்டம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து கார்பன் சமநிலை குறித்த புத்தகத்தை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், “2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலை என்ற அடிப்படையில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

பொது இடங்களில் மரங்களை நட, போக்குவரத்துகளில் ஏற்படக் கூடிய கார்பன் குறைப்பு, நீர் நிலைகளை பாதுகாப்பது ஆகிய தலைப்புகளில் நடைபெற்றது. கார்பன் நியூட்ரல் அடிப்படையில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. கோவையில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதனை அதிகப்படுத்துவோம்.

தமிழ்நாட்டில் 10 கோடி மரம் நடவு செய்யப்படும். இந்த இலக்கை நோக்கி செயல்படுகிறோம். ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் 70 லட்சம் மரங்கள் நடவு செய்வதாக அறிவிக்கிறார். 6 லட்சத்து 40 ஆயிரம் மரங்களை உணவுத்துறை அமைச்சர் நடவு செய்துள்ளார். தேசிய பசுமை தீர்ப்பாயம் மூலமாக செங்கல் சூளை தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரத் துறை அமைச்சர், அறிவிப்பு இரண்டில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் என அறிவித்துள்ளார். வெளிநாட்டு மரங்களை நடவு செய்வதால் எந்த பயனும் இல்லை. வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டால், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்.

நாட்டு மரங்கள்தான் நடவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளோம். பொள்ளாச்சி காயில் இண்டஸ்ட்ரீ நிலத்தடி நீர் நிலைகள் பாதிப்பு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். மரங்களை நடவு செய்வது முக்கியம் இல்லை, அதனை முறையாக பராமரித்து வளர்க்க வேண்டும்.

கர்நாடக தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் அமிலம் கலந்த நீர், பெங்களூரில் இருந்து வெளியேறும் கழிவு நீர் காவரி ஆற்றில் கலக்கப்படுவதால் கெலவரப்பள்ளி அணைக்கட்டில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளர் கர்நாடக மாநில அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கழிவுநீரை சுத்திகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள வழிகாட்டல்படி செயல்படுத்தப்படும்” என கூறினார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் மேயர் கல்பனா ஆனந்த் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்துக - கர்நாடக அரசுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.