கோவை மாவட்டம், சிந்தாமணி பகுதியில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை இயங்கி வருகிறது. இங்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி இன்று (ஜூலை.28) ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இப்பகுதியில் செயல்பட்டுவரும் மருந்தகம், நியாயவிலைக்கடை, மளிகைப் பொருள்கள் ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டு, விற்பனை குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களிடமும் விற்பனை பொருள்களின் தரம் குறித்து வினவினார்.
![ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் இ.பெரியசாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12600072_inspects.jpg)
ஆய்வுக்குப் பின்னர் பண்டக சாலையில் விற்பனையை உயர்த்துவற்கான ஆலோசனைகளை வழங்கி, விளம்பர பலகையை உடனடியாக வைக்கவும் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆலோசனை